“ஹ்ம்ம்ம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் பாரதி மா... உனக்காவது 4 மாதம் வரைக்கும் என் பேத்தி உன்னை தொல்லை பண்ணாம இருந்தா...எனக்கெல்லாம் இந்த ஆதி பய உருவான 45 ஆவது நாள் ல இருந்தே படுத்த ஆரம்பிச்சுட்டான்... பச்ச தண்ணி குடிச்சா கூட அதுக்கு மேல ரெண்டு மடங்கு வெளியில வரும்..”
“ஓ... அப்புறம் எப்படி அத்தை சமாளிச்சீங்க... மாமா உங்களை நல்லா பார்த்துகிட்டாரா?? “ என்றாள் ஒரு வித ஏக்கத்துடன்..
“ஹ்ம்ம்ம் உன் மாமா வும் சுசியும் தான் என்னை கீழ கூட விடாமல் பார்த்துகிட்டாங்க... முதல் ஐந்து மாதமும் ட்ரிப்ஷ் ல தான் சாப்பிட்டு கிட்டிருந்தேன்... பாவம்.. உன் மாமா தான் ரொம்ப துடிச்சு போய்ட்டார்.. நான் பட்ட வலியை விட அவர் பட்ட கஷ்டம் தான் அதிகம்....
பாதி நாள் ஆபிஷ்க்கே போகாமல் என் பக்கத்துலயே
...
This story is now available on Chillzee KiMo.
...
விடை பெற்று கிளம்பி சென்றான்..
அலுவலகம் சென்றவநுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. அவள் முகமே கண் முன் வந்தது.. அதுவும் அவள் மயங்கி சரிந்த நிலை வேறு..
மதியம் ஜானகிக்கு போன் பண்ணி எப்படி இருக்கா என்று விசாரித்தான்..