“சே!! இந்த அத்தைய எப்படி மறந்தேன்?? .. இவங்களுக்காகத் தானே இந்த ஆட்டத்திற்கு சம்மதித்தது.. இவர்கள் சிரிக்க , இவர் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக் கடனுக்காகத்தான நான் இந்த ஆட்டத்திற்கு ஒத்துக்கொண்டது...அதை எப்படி மறந்தேன்... இவருக்காக எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கலாம்...
இந்த ஒரு வாமிட்க்கு போய் இப்படி புலம்பி கிட்டிருக்கேனே.. “ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.. பின் அவரை பார்த்து
“அத்தை.. நீங்க எப்படி இங்க?? “ என்று திணறினாள்...
“ஹ்ம்ம்ம் உன் மறுமகள் அங்க முடியாமல் கஷ்ட பட்டுகிட்டிருக்கா... நீ இங்க என்ன பண்றனு அந்த வேலன் வந்து என்னை அதட்டவும் நான் அப்படியே கிளம்பி அவனோட மயில் வாகனத்தை வாங்கிகிட்டு பறந்து வந்திட்டனாம் என் செல்ல மறுமகளை பார்க்க... “ என்று சிரித்தார்...
...
This story is now available on Chillzee KiMo.
...
இடுப்பை கட்டிகொண்டவள்
“அத்த.. ஏன் இப்படி குமட்டிகிட்டு வருது?? “ என்று இதுவரை தன் உள்ளே இருந்த தன் சந்தேகத்தை கேட்டாள்...
“இந்த மாதிரி கன்சீவ் ஆ இருக்கிறப்போ எல்லாருக்குமே இது மாதிரி வாமிட் வர்ரது வழக்கம் தான் பாரதி மா..”
“இவ்வளவு நாள் இல்லையே... இப்ப மட்டும் ஏன் ?? “