“நீ எதுக்கும் கீழ எழுந்திருச்சு போகாத.. எல்லாமே இங்கயே இருக்கு.. அப்படி எதுனாலும் என்னை எழுப்பு.. “என்றான்..
அவளும் சரி என்று தலையை ஆட்டவும்,
“சரி... என் பேபி என்ன பண்றா?? என் பேபி ய தொட்டு பார்க்க வா.. “என்றான் கண்களில் அதே ஏக்கத்துடனும் ஆசையுடனும்..
“பரவாயில்லையே.. அன்று அப்படி பேசினவன் இன்னைக்கு பெர்மிஷன் எல்லாம் கேட்கறான்.. “என்று நினைத்து சிரித்து கொண்டாள்..
“ஏய்.. இங்க பார்... நாளையில் இருந்து பெர்மிஷன் எல்லாம் கேட்க மாட்டேன்.. நானே தொட்டு பார்த்துக்குவேன்.. “ என்று மிரட்டினான் மெல்லிய குரலில்..
“அதான பார்த்தேன்...” என்று முனகியவள் கட்டிலில் ஏறி படுத்துகொண்டே, தன் புடவையை விளக்கி அருகில் நின்று கொண்டிருந்தவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைக்க, அவனும் அவளின் வயிற்றில்
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் ஆதியின் கை தன்னை சுற்றி அணைத்திருப்பதை கண்டு திகைத்தாள்...மீண்டும் ஒரு முறை தன் கண்ணை நன்றாக தேய்த்துக் கொண்டு நன்றாக உற்று பார்த்தாள்... அவனே தான் அவளை கட்டி கொண்டு தூங்கி கொண்டிருந்தான்... சிறு பிள்ளையாக பிடிவாத குணத்துடன் தூங்கும் அவனையே சிறிது நேரம் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்..