“உனக்கு ஏன் டி பொறாமை.. என் பையன் நான் கட்டிக்குவேன்.. உனக்கு வேணும்னா நீயும் உன் புருஷனை கட்டிக்கோ.. “ என்று ஜானகியும் கண் சிமிட்ட, அதை கேட்டு தான் அவனை கட்டி கொண்டாள் எப்படி இருக்கும் என்று யோசித்தவளுக்கு அவன் அன்று மருத்துவமனையில் ஷ்வேதாவை பார்த்த பிறகு தன்னை இறுக்கி அணைத்தது நினைவு வர, கன்னம் சிவந்தது அவளுக்கு...
ஆதியும் அதையே நினைத்து கொண்டு அவளை குறும்பாக பார்த்து,
“ஹ்ம்ம் நான் ரெடி மா... உங்க மறுமக ரெடியானு கேளூங்க.. “ என்று அவளை பார்த்து கண் சிமிட்ட, அவளோ மேலும் சிவந்து
“சீ... ஆசையை பார்... “ என்று ஓடிவிட்டாள்... அவனும் சிரித்துகொண்டே அவள் கொடுத்த சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு தான் விட்டு வந்திருந்த வேலையை தொடர தன் அலுவலக அறைக்குள் சென்றான்..
... ல்ல,
“இல்ல.. இருக்கட்டும்.. நான் இப்படியே சாஞ்சுக்கறேன்.. “ என்று தயங்கினாள்.. “ஹோய் பட்டிகாடு.. ரொம்பத்தான் பிகு பண்ணாத.. நேற்று புல்லா என் மேல தான் தூங்கின... தெரியுமா?? “ என்றான் சிரித்தவாறு
“ஆங்க்..நிஜமாகவா?? “என்று தன் பெரிய கண்ணை திறந்து முழித்தாள் நம்பாதவளாக..
This story is now available on Chillzee KiMo.
...