அவளின் பார்வை அவன் உதட்டை தழுவ, தூங்கும்பொழுதும் அதே போல பிடிவாத குணத்துடன் இருந்தன அவன் இதழ்கள்… அவளுக்கு அவன் உதட்டை வருட கைகள் துடித்தன..
அதற்குள் தன்னை சமாளித்துகொண்டு
“அவனை தொட்டு பார்ப்பது, தூங்கற சிங்கத்தை எழுப்பற மாதிரி.. வேணாம் காலையிலயே அவன் கிட்ட வாங்கி கட்டிக்கணும்..” என்று தன்னை கட்டு படுத்தி கொண்டவள் இன்னும் அவன் அருகில் நெருங்கி படுத்துகொண்டு அவன் விடும் மூச்சு காற்றை அனுபவித்தாள்...
பின் நேரம் ஆவதை உணர்ந்து மெல்ல அவன் கையை விளக்கினாள்.. அவனோ இன்னும் அவளை இறுக்கி கொண்டான்.. அவனின் முரட்டுத்தனமான கையை மீண்டும் தன் பலத்தைக் கொண்டு மெல்ல தூக்கி அவன் தூக்கம் களையாமல் அவன் மேல் வைத்து விட்டு குளியல் அறைக்குள் சென்றாள்..
பின் குளித்து முடித்ததும் கீழ சென்று ஜானகிக்கு காலை
...
This story is now available on Chillzee KiMo.
...
் எங்களை , உங்க இளவரசியை நினைச்சுக்கங்க..” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டது நினைவு வர, ஷ்வேதாவால் அவன் உள்ளே எரிய ஆரம்பித்த நெருப்பு பாரதியின் மருந்தால் அப்படியே சாரல் மழை பொழிந்து உடனேயே அனைந்து போனது..
தன்னுள் வந்த கோபத்தையும் அது அனைந்த வேகத்தையும் உணர்ந்து,