அதே ஏக்கத்துடன் அவளும் தலை அசைத்து அவன் பின்னே இறங்கி வந்தாள்... சுசிலாவும் ரெடியாக இருக்க, ஜானகியும் பாரதியும் கார் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர்.. பின் இருவரும் சாப்பிட்டு தங்கள் கதையை தொடர்ந்தனர்...
அலுவலகம் சென்றவனுக்கோ வேலையே ஓடவில்லை.... நேற்று முழுவதும் ஒரு நாள் அவள் அருகில் இருந்ததால் அவளின் கொழுசு சத்தமும், வாய் ஓயாமல் பேசிய பேச்சும், சிரிப்பும் என்று எதை எடுத்தாலும் அவள் நினைவே!! .. எங்கு பார்த்தாலும் அவளின் அந்த ஏக்க முகமே!!
“சே!! என்ன இது?? .. இப்படி படுத்தறா?? எனக்கு தான் என்னாச்சு.. என்னவோ டீன் ஏஜ் பையன மாதிரி அவ மேல இப்படி தலை சுத்தி போறேன்?? ம்ஹும் இது தப்பு....இதை தொடரக்கூடாது “ என்று தன்னை கட்டுபடுத்தி மதியம் வரை வேலையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படியே சிரிச்சுகிட்டே இருக்கணும் கண்ணா.. “ என்று அவனை கட்டி கொண்டு அவன் மார்பில் முத்தமிட்டார்...
அவனும் அவரை அணைத்து சில நொடிகள் நிற்க,
“ம்ஹூம்.. நானும் இங்க தான் இருக்கேன்.. போதும் உங்க கொஞ்சல் ஷ் அத்தை... “ என்று சிரித்த படியே சிற்றுண்டி தட்டை எடுத்து வந்தாள் பாரதி...