அதன் பின் பவித்ரா சகஜமாக பேச ஆரம்பித்தாள் தன் அன்னையிடம்...
பவித்ரா நின்று கொண்டிருக்க அவள் தலையில் சுத்தியிருந்த டவலை எடுத்து அவள் கூந்தலை அழுந்த துடைத்து கொண்டிருந்தார் பார்வதி..
அதற்குள் குளித்து முடித்து பவித்ரா வாங்கி வந்திருந்த ஜீன்ஷ் ம் டீ ஷர்ட் ஐயும் அணிந்து ஹாலுக்கு வந்தான் ஆதி.. அவன் வருகையை அறிந்து அவள் பார்வை தானாக அங்கு தாவியது.. அதை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து வைத்து கொண்டாள் ...
ஆனால் பார்வதி அவனை பார்த்து,
“வாவ்.. சூப்பரா இருக்கு மாப்பிள்ளை.. இந்த ட்ரெஷ் உங்களுக்கு.. “ என்றார்..
இதற்கும் மேல் அவனை பார்க்காமல் இருக்க முடியாது என தோன்ற மெல்ல நிமிர்ந்து அவளும் அவனை பார்த்தாள்...
அவனுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது அவள் வாங்கி வந்திருந்த ஜீன்ஷ் ம் டீ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பார்வதிக்கு மனம் நிறைந்து இருந்தது....
திருமணம் ஆகி புருஷன் வீட்டுக்கு தன் மகளை அனுப்பி வைக்கும் ஒவ்வொரு தாயின் கவலை, தன் மகள் போற இடத்தில் எப்படி வாழப் போகிறாளோ?? ஒவ்வொருவரையும் அனுசரித்து அங்கு உள்ள நடைமுறைக்கு எப்படி தன்னை மாற்றி கொள்ளப் போகிறாளோ?? என்ற கவலையே முன்னே நிக்கும்...