“ரியலி?? நான் எது கேட்டாலும் நடக்குமா?? “என்று அவளை குறும்பாக பார்த்து கண்ணடிக்க, அவளோ அவனை எரித்து விடுவதை போல பார்த்து முறைத்தாள்...
அவனும் சிரித்துக் கொண்டே சிறிது நேரம் கண் மூடி நின்றான்.. பின் ஐயர் நீட்டிய தட்டில் ஒரு 500 ரூபாய் நோட்டை வைத்தான்... ஐயருக்கு வாயெல்லம் பல்லாயிற்று...
“நீங்க இரண்டு பேரும் இப்படியே சந்தோஷமான தம்பதிகளா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும்.. “ என்று வாழ்த்தி சென்றார்...
பின் இருவரும் கோவிலை சுற்றி வந்ததும் அருகில் இருந்த மண்டபத்தில் பவித்ரா ஏறி காலை மடக்கி அமர்ந்து , ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.. அவனுக்கு அந்த மாதிரி அமர்வது கஷ்டமாக இருந்தது.. அதனால் காலை தொங்க விட்டு அவளின் அருகில் அமர்ந்தான்
“என்னடி இது?? .. இங்கல்லாம் உட்கார்ர?? .. அதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கோம் டி மா... இவர் தான் உன் ஆத்துக்காரரா?? புள்ளையாண்டான் உனக்கு பொருத்தமா இருக்கான்.. ஆமாம் தம்பி எங்க வேலை செய்யறார் “என்றார் அந்த மாமி ஆதியை பார்த்தவாறு...
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..
பின் அவள் மெதுவாக “AN Group of Companies “ என்று ஆரம்பிக்கவும்