அப்பொழுது ப்ரேம் உள்ளே வந்து அவன் காரை பார்க் பண்ணிவிட்டு, பவித்ரா தோட்டத்தில் அமர்ந்து இருப்பது தெரிய , கையில் கார் சாவியை சுற்றி கொண்டே ஷ்டைலாக நடந்து வந்தான்...
அருகில் வரவும் பவித்ராவுடன் சரண்யாவும் அமர்ந்து இருப்பது தெரிய அவன் மனம் அவனை அறியாமல் துள்ளி குதித்தது..
ஆதியின் திருமணத்தில் அவளை பார்த்த நினைவு வர அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.. அதே மகிழ்ச்சியில் உல்லாசமாக விசில் அடித்து கொண்டே பவித்ராவின் அருகில் சென்றவன்
“ஹாய் சிஷ்டர்.. How are you?? “ என்று சிரித்து கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்
“I’m fine ப்ரதர்.. “ என்று பவித்ராவும் சிரிக்க,
“அப்புறம் வாழ்த்துக்கள் சிஷ்டர்.. ஒரே நாள்ல பாப்புலர் ஆகிட்டீங்க.. இப்பதான் நியீஷ் பார்த்தேன்... ரொம்ப சந்தோஷம் நீங்க இந்த பீல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளியில் காட்டி கொள்ளாம கடமையே கண்ணாக பவித்ராவுக்கு விளக்கி கொண்டிருந்தான்...
ஒரு வழியாக எல்லா கேள்வியும் முடிய, அதே நரம் ஆதியும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்..அருகில் வந்ததும்,
“வாடா மச்சான் எப்படி இருக்க?? “ என்று அவன் முதுகில் தட்டியவன் அப்பொழுது தான் சரண்யாவை பார்க்க,