ஆனால் ஓரக் கண்ணால் அவள் அறியாமல் அவளை அடிக்கடி பார்த்து கொண்டான்.. அவனுக்கும் அது புதுவிதமான அனுபவமாக இருந்தது.. .எத்னையோ பெண்களை கூட்டி வந்திருக்கிறான் இதே காரில்.. அப்பொழுது எல்லாம் தோன்றாத ஒரு பரவசம் இன்று அவளுடன் செல்லும்பொழுது தோன்றியது..
சரண்யாவும் அதே மனநிலையில் இருக்க, இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்து அந்த மோன நிலையை ரசித்து வந்தனர்.. பின் சரண்யாவின் வீடு வந்திருக்க, கதவை திறக்க முயல அதை திறக்க முடியாததால் அவள் புறமாக எட்டி முன்னால் வந்தவன் கதவை தள்ளி திறக்க, அவனின் அந்த நெருக்கம் சரண்யாவிற்கு படபடப்பாக இருந்தது...
எதேச்சையாக கதவை திறக்க வந்த ப்ரேமுக்கும் அவளின் அந்த நெருக்கம் அவனுள் புரட்டி போட்டது...
கதவை திறந்து விட்டவன் வேகமாக தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து கொண்டான்.. சரண்யாவு
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரபலமடைந்து வந்தது..
செய்கூலி, சேதாரம் என்று அதிகம் பிடுங்காமல் குறைந்த லாபத்தில் மட்டுமே விற்றதால் நல்ல மதிப்பை பெற்றது.. அதோடு அங்க வரும் பெண்களுக்கு இலவசமாக ஐஷ்கிரீம் கொடுக்க என ஒரு ஐஷ்கிரீம கவுணடர் ஏற்பாடு செய்திருந்தாள் பவித்ரா.. அதற்காகவே பெண்கள் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது...