“ஹே வாங்க சிஷ்டர்.. நீங்க எப்படி இருக்கீங்க?? ... எப்ப வந்தீங்க??.. “ என்று விசாரித்து கொண்டே பவித்ராவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்...
சரண்யாவும் அவனை பார்த்து புன்னகைத்து
“நல்லா இருக்கேன் ஹீரோ சார்... உங்க ஹீரோயின் தொல்லை தாங்க முடியலை.. நீங்க ஏதோ அவளுக்கு பெரிய பதவியை கொடுத்திட்டீங்களாம்... உடனே அந்த ஜான்சி ராணி களத்துல குதிச்சிட்டா..
அவ குதிச்சதோட இல்லாம என்னையும் அதுல இழுத்து விட ஒரே நச்சு... அதான் அவ தொல்லை தாங்காம கிளம்பி வந்திட்டேன்.. “ என்று சிரித்தாள்...அவள் சிரிப்பதையே ரசனையுடன் பார்த்தான் ப்ரேம்..
ஆதியும் சரண்யாவின் புலம்பலுக்கு சிரித்து கொண்டே பவித்ராவை பார்க்க அவள் சரண்யாவை முறைத்தாள்...
“மச்சான்... சிஷ்டர் செம பாஷ்ட் டா.. நீ காலைல தான புள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் பார்வை தன் மேல் படும்பொழுது எல்லாம் அவளுக்குள் ஒரு இனம் புரியாத பரவசம் வந்து போனது..
அப்பொழுது அப்படி பார்த்தவனிடம் எப்படி தனியா காரில் செல்வது என்று யோசித்தே வர மறுத்தாள்... ஆனால் அவள் எதிர் பார்த்ததற்கு மாறாக, ப்ரேம் அவளிடம் எதுவும் பேசவில்லை.. அவள் பக்கமும் திரும்பவில்லை...