"பேபி உண்மை என்னன்னு நம்ம ரெண்டுபேருக்கும் தெரியும் அதுபோதும். அடுத்தவங்க நினைக்குறதப் பத்தி நாம கவலப்படத் தேவையில்ல. மத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்களோன்னே நாம நினைச்சுகிட்டிருந்தோம்னா நம்ம வாழ்க்கைய நம்மளால வாழவே முடியாது. புரிஞ்சுதா" என்றான் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு.
அவன் சொல்வது சரிதான் நம்ம வாழ்க்கைய நாமதான் வாழ்ந்தாகனும் மத்தவங்க வந்து வாழப்போறது இல்லையே அப்புறம் ஏன் அதப்பத்தி கவலப்படனும் என நினைத்த வெண்ணிலா அவனைப் பார்த்து மெல்ல சிரித்து "ம்ம்" என்றாள்.
கௌவுதமும் சிரித்துக்கொண்ட எழுந்து அவள் கை பற்றி அவளையும் எழுப்பி "சரி வா போகலாம்" என்று பங்களாவிற்குள் அழைத்துச் சென்றான். பின்பு இருவரும் சேர்ந்து பத்திரிக்கை என்ன மாதிரி டிசைனில் அடிக்க வேண்டும் எவ்வளவு அடிக்கவேண
...
This story is now available on Chillzee KiMo.
...
ில பேர் வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை. கௌவுதம் வெண்ணிலாவைவிட்டு சிறிதும் அகலவில்லை. தனக்கு பக்கத்திலேயே அவளை வைத்திருந்தான். 'இவளுக்கு இப்படி ஒரு வாழ்வா' என்று அவர்களுக்குத்தான் வயிறெரிந்தது. ஆனாலும் கௌவுதமின் முன்பு எதையும் காட்டாது அவர்களை வாழ்த்தினர்.