'ஹூம் எனக்கும் அது புரியலதான்'
அவள் அமைதியாய் நிற்பதைப் பார்த்த கௌவுதம் "வெண்ணிலா உனக்கு என்னப் பிடிக்குமா" என்றான் அவள் கண்களை நேராகப் பார்த்து.
'இந்த உலகத்துலயே எனக்கு அதிகமாப் பிடிச்ச ஒரே ஆளு நீதான் கௌவுதம்'
"சொல்லு வெண்ணிலா பிடிக்குமா பிடிக்காதா"
"பிடிக்கும் கௌவுதம்"
"பிறகு என்ன வெண்ணிலா. என்ன கல்யாணம் பண்ணிக்குறதுல உனக்கு என்ன தயக்கம்"
"ஏன்னா நீங்க இந்த முடிவ யோசிச்சு எடுத்தமாதிரி எனக்குத் தெரியல"
கௌவுதமின் பொறுமை மெல்ல மெல்ல கரைந்துகொண்டிருந்தது.
வெண்ணிலாவின் தோள்களைப் பற்றிய கௌவுதம் "நீ ஏன் மறுபடி மறுபடி சொன்னதையே சொல்லிகிட்டிருக்க வெண்ணிலா. என்ன கல்யாணம் பண்ணிக்குறதுல உனக்கு அப்படி என்னதான் பிரச்சனைனு எனக்கு சத்தியமாப் புரியல. ஒருவே
...
This story is now available on Chillzee KiMo.
...
யாரும் இல்லன்னு தெளிவா சொல்லீட்டான்ல. அப்புறம் என்ன கல்யாணத்துக்கு பிறகு உன்ன காதலிக்க வை'
'அவன் கல்யாணம் பண்ணிக்றியான்னு கேட்டதும் இதுதான் வாய்ப்புன்னு சரின்னு சொல்றது தப்பில்லையா வெண்ஸ்'
'யார்றா இவ. நீ ஒன்னும் அவன்கிட்ட போய் கேக்கலையே. அவன்தான வந்து உன்கிட்ட கேட்டான்'