"போயிட்டு வாங்க தம்பி நயிட்டு ரெண்டுபேருக்கும் சுத்திப்போடனும் எல்லார் கண்ணும் உங்க மேலதான் இருக்கும்" என்று கூறி அனுப்பிவைத்தார்.
கௌவுதம் பொதுவாக எஸ்டேட்டிற்கு அடிக்கடி வருவது கிடையாது. வெண்ணிலாதான் அவன் ஊட்டியில் இருக்கும் நேரம் எஸ்டேட்டில் வேலை செய்யும் யாருக்காவது திருமணம் என்றாள் அவனை கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பாள். அதேமாதிரி யாருக்காவது குழந்தை பிறந்தால் குழந்தையைப் பார்க்கவும் அனுப்பி வைப்பாள். அப்போதுதான் வேலை செய்பவர்கள் முதலாளி தங்கள் மேல் அக்கறையாய் இருக்கிறார் என்று உணர்வார்கள் அது அவர்களது வேலையில் எதிரொலிக்கும் என்பது அவளது நம்பிக்கை.
எஸ்டேட்டில் வேலை எப்பவும்போல நடந்துகொண்டிருந்தது.
கௌவுதம் மேற்பார்வையாளரை அழைத்து தொழிலாளர்கள் அனைவரையும் ஆபிஸ் அறை முன் அழைத்து வர
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற கௌவுதம் அவர்களிடம் விடைபெற்று வெண்ணிலாவிடம் "நான் வீட்டுக்கு கிழம்புறேன் பேபி. ஈவினிங் பாக்கலாம்" என்றுவிட்டு சென்றுவிட்டான்.
கௌவுதம் கிழம்பிச் சென்றதும் எஸ்டேடில் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்துகொண்டு அவளை கிண்டல் செய்தும் கேலி செய்தும் மேலும் சிவக்கவைத்தனர்.