அதன்பிறகு அன்றைய பொழுது இனிமையாகச் சென்றது. மாலைக்குள் அவர்களது கல்யாணம் விசயம் எஸ்டேட்டைத்தாண்டி பரவியது.
மாலை அவுட்கவுஸிற்கு வந்த வெண்ணிலா ரிப்ரெஷ் செய்துவிட்டு கௌவுதமைப் பார்க்க கிழம்பினாள்.
வெளியே செல்லபோகையில் போன் அடித்தது. எடுத்து யார் என்று பார்த்தாள் அவளது கல்லூத் தோழி சந்தியாதான் போன் பண்ணியிருந்தாள்.
"ஹலோ"
"என்ன கல்யாணப் பொண்ணு. எப்டியிருக்கீங்க"
"நல்லாயிருக்கேன் சந்தியா உனக்கு எப்படி கல்யாணம்னு..."
"எப்படித் தெரியும்னு கேக்குறியா. நீ வாட்ஸப் பாக்கலையா நம்ம காலேஸ் குருப்ல இப்ப ஹாட் டாபிக்கே உன் கல்யாணம்தான்"
"ஓஓஓ...அப்டியா நான் பாக்கல. கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடு சந்தியா"
"ம்ம்..கண்டிப்பா வந்துடறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்"
...
This story is now available on Chillzee KiMo.
...
்தன பொய்களுக்கு அப்புறம் உண்மைய சொல்றன்னு நான் பொறுமையா வெயிட்பண்ணி பாக்குறேன்" என்றான் அசராமல்.
இதற்குமேல் அவனிடம் மறைக்கமுடியாது என உணர்ந்த வெண்ணிலா யார் கூறினார்கள் என்று பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாய் அவள் தோழிகளில் சிலபேர் கூறினார்கள் என்று பூஜா கூறியதைக் அவனிடம் சொன்னாள்.