விடுப்பு சொல்லி விட்டு சென்றவள் கடைக்கு வந்திருக்கிறாளே.. என்று ஆச்சர்யமாக பார்த்த சரண்யா கண்ணால் ஜாடை காட்டி என்ன?? ஏன் கடைக்கு வந்த என்று கேட்டாள்...
பவித்ராவும் ஒன்றும் இல்லை என்று தலையாட்டிம் மெல்ல புன்னகைத்து அவளை கஷ்டமரை பார்க்க சொல்லி விட்டு தங்கள் அறைக்குள் சென்றாள்...
அது சரண்யாவும் பவித்ராவும் உபயோகிக்கும் அறை.. இருவருக்குமே இரண்டு சேர் போடபட்டு பெரிய மேஜையும் இருந்தது.. அந்த கடையை பொருத்த வரை இருவருமே சமமாக மதிக்கபடுவர்..
சரண்யா வொர்க்கிங் பார்ட்னராக சேர்ந்தாலும் இது வரை அதில் வந்த இலாபத்தை எடுத்து கொண்டதில்லை.. அதில் வரும் இலாபத்தை அந்த கடையின் வளர்ச்சிக்கு முதலீடு செய்ய, அந்த கடை பெரிய அளவில் வளர்ந்து இருந்தது..ஆதி கூட இருவரையும் பாராட்டியிருக்கிறான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ப ஆசை படறா மேடம்.. இதுவரைக்கும் அவளுக்கு நாங்க நகையே வாங்கி கொடுத்ததில்லை..
முதல் முதலா கல்யாணத்துக்கு தான் வாங்க வந்தோம்... அவளுக்கு பிடிச்சதை வாங்கி கொடுக்க முடியலைனு இருக்கு... நான் வேணா மாசா மாசம் மீதி வர பணத்தை கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்திடறேன்.. “ என்றார் கெஞ்சலுடன்.. ,