சிறிது நேரம் யோசித்தவள்
“மஹா... எவ்வளவு பாக்கி வருது?? “என்றாள் பவித்ரா..
அவள் ஒரு தொகையை சொல்ல,
“சரி மஹா... அத என் அக்கவுண்ட் லயிருந்து கழிச்சுக்கோ.. இவங்க கிட்ட இருக்கிற பணத்தை வாங்கி கிட்டு இவங்களுக்கு அந்த நகையையே கொடுத்திடு.. “ என்றாள்..
அதை கேட்டு அந்த பெண்மணி மகிழ்ந்தாலும்
“மேடம்.. எங்களுக்காக நீங்க கையில இருந்து கொடுக்க வேண்டாம்.. நான் மாசா மாசம் திருப்பிக் கொடுத்திடறேன்.. . “ என்றாள் தயங்கியவாறு...
“இருக்கட்டும் மா... குரிப்பிட்ட தொகைக்கு மேல நாங்க தள்ளுபடி கொடுக்க முடியாது.. அதான் நானே மீதி தொகையை கொடுத்திடறேன்.. இது உங்க பொண்ணு கல்யாணத்துக்கு எங்களோட கல்யாண பரிசா இருக்கட்டும்... எந்த குறையும் இல்லாம உங்க பொண்ணை அவ புகுந்த வீட்டுக்கு அனுப்பி வை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜர் இன்னைக்கு என்ன வறுத்து எடுக்க போறார்...
அப்பயே சொன்னார் நானே வந்து பிக்கப் பண்ணிக்கறேன் ன்.. பெரிய இதுவாட்டாம் வேணாம்னு சொல்லிட்டு இந்த கேப் ஐ புடுச்சி வர்ரதுகுள்ள கொஞ்சம் லேட் ஆகியிடுச்சே... சீக்கிரம் போகணும்.. “ என்று மனதுக்குள் எண்ணியவாறு அந்த கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தாள்...