இருக்கும். அதே போல் வீரர்கள் தலைப்பாகையில் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை வைத்துதான் கண்டுபிடித்தேன்”
“அவரை அருகில் பார்த்தவுடன் தெரிந்த விஷயம் இது. ஆனால் இன்றைக்கு அவர்களைச் சந்திப்போம் என்று எப்படி தெரிந்தது?”
“தனியாக யாராவது சந்தித்தால், அது நிச்சயம் மற்றவர்களால் கவனிக்கப்படும். சந்தடியான இந்த சந்தைக் கூடும் நாள் தான் அனைத்துக்கும் உதவியாக இருக்கும். இது எல்லா ஒற்றர்களுக்கும் தெரியும்.”
“நாம் அக்பரோடு நேரடியாகத் தானே மோதப் போகிறோம்?”
“நிச்சயமாக?”
“பின் எதற்காக என்னை அக்பரின் நேரடித் தொடர்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளச் சொல்கிரீர் இளவரசே”
“அக்பரின் எண்ணங்கள் பற்றி அறிய அருகில் இருத்தல் அவசியம் தேவி. அத்தோடு உன் வீரத்தின் மீதுள்ள நம்பிக்கையால் தான் இந்த யோசனை தோன்றியது. மேலும் நானும் எப்படியாவது அரண்மனைக்குள் ஒரு வேலைக்காரனாக நுழைந்து , உன் கண்பார்வையில் தான் இருப்பேன் தேவி.”
இளவரசரின் திட்டமிடலில் வியந்த ராணி, அவன் திட்டப்படி நடக்க ஒத்துக் கொண்டாள்.
தொடரும்!