அவனிடமிருந்து தள்ளியே நிறுத்தி வைத்திருந்தது.
ஆனால் இருவரையும் மண வாழ்க்கையில் இணைக்க வேண்டுமென்பது குறிஞ்சியம்மாளின் விருப்பமாக இருந்தது. அதை தன் மகனிடமும் மகளிடமும் கூறிய போது அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
ஞானசெல்வத்திற்கு அன்னை எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்ற எண்ணம் இருப்பதால் அவர் அதை மறுக்கவில்லை. வஞ்சிக்கு மகளை நல்லப்படியாக திருமணம் செய்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான், ஆனால் இப்போது இந்த வீட்டுக்கே மகளை மருமகளாக்குவது பற்றி தன் அன்னை பேசியதும், அவருக்கு மிகவுமே மகிழ்ச்சி, அன்னை சொன்னதை அப்போதே ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இது நித்யாவிற்கு தெரியும் போது, "கார்த்திக் மாமாவை நான் எப்படி கல்யாணம் செய்து கொள்வது? அவருக்கு சற்று கூட பொருத்தமில்லாதவள் நான்.." என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
வஞ்சியும் அவளிடம் விஷயத்தை கூறிய போது, தன் மனதில் இருப்பதை அப்படியே கூறினாள். "இதெல்லாம் தேவையில்லாம எதுக்கு யோசிக்கிற.. பார்க்க கண்ணுக்கு லட்சணமா இருக்க, அது போதாதா? உன்னை வேணாம்னு கார்த்திக் சொல்ல மாட்டான் நித்தி.. அதனால் நீயா இந்த கல்யாணம் வேண்டாம்னு பாட்டி, மாமாக்கிட்ட உளரி வைக்காத.. இது உனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்.." என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார்.
ஆனாலும் கார்த்திக் மாமா இந்த திருமணத்திற்கு மறுப்பு சொல்வாங்க.." என்று தான் நித்யா நினைத்தாள். அதற்கேற்றார் போல், ஒருநாள் பாட்டியை பார்க்க அவர் அறைக்கு அவள் செல்ல, உள்ளே கார்த்திகேயன் பாட்டியோடு பேசிக் கொண்டிருந்தான்.
அவள் அறைக்கு அருகே போகும் போதே, "என்னப் பாட்டி.. எனக்கும் நித்யாக்கும் கல்யாணமா? என்ன விளையாட்றீங்களா? அவ வயசென்ன? என்னோட வயசென்ன? இதெல்லாம் சரி வருமா?" என்று அவன் கேட்டது தான் காதில் விழுந்தது.
அவர்கள் இருவரும் தன்னைப்பற்றி பேசுகிறார்கள் என்பது தெரிந்ததும், அதற்கு மேல் அவள் அங்கு நிற்கவில்லை, 'எப்படியோ கார்த்திக் மாமா பேசி பாட்டி மனதை மாற்றி விடுவாங்க' என்பதாக தான் அவன் நினைத்தாள்.
ஆனால் அவனுமே திருமணத்திற்கு சம்மதித்துவிட்டான் என்று தெரிந்ததுமே, "எப்படி மாமா சம்மதம் சொன்னாங்க.." என்று குழம்பினாள்.
எதையுமே மற்றவர்களிடம் உடனுக்குடன் பகிர்ந்துக் கொள்ளும் குணம் அவளுக்கு கிடையாது. தனக்குள்ளேயே போட்டு மனதிற்குள் குழம்பிக் கொள்வாள். சிறு வயதிலிருந்தே வீட்டில்