(Reading time: 19 - 37 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

அந்த ஆடைகளை உடுத்திய பின்பு நித்யாவின் தோற்றமே மாறிப் போக, "அடடா என்னோட பேத்தி எவ்வளவு அழகா இருக்கா.. இனி இப்படியே ட்ர்ஸ் தைத்துப் போடு, அழகா இருக்கு.." என்று குறிஞ்சியம்மாள் சொல்லவும், வஞ்சியும் அதை ஆமோதித்தார்.

அப்போது கூட நமக்கு தானாகவே இப்படியெல்லாம் உடுத்திக் கொள்ள வேண்டுமென்று தெரியவில்லையே, மாமாக்கு எவ்வளவு பெரிய ஆளுங்கல்லாம் பழக்கம், அவங்களை பார்க்க மாமா நம்மளை  அழைச்சிட்டுப் போனா, நம்ம கண்டப்படி ட்ரஸ் பண்ணிக்கிட்டு போனா, அங்க மாமாக்கு தானே அசிங்கம், என்னை போய் மாமாவுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு பாட்டிக்கு எப்படி தோனுச்சு.." என்று அதையே தான் யோசித்தாள்.

இப்போதும் அவர்களையெல்லாம் பார்க்கும் போது மீண்டும் அதே எண்ணம் தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் கார்த்திகேயன் நண்பர்களோ, "அவள் மிக அழகாக இருக்கிறாள், கார்த்திக்கிற்கு அவள் பொருத்தமானவள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த வார்த்தைகளெல்லாம் அவளின் குழம்பிய மனதை தெளிய வைக்கவில்லை, அவளின் குழப்பம் அந்த திருமண வரவேற்பு முடிந்து வீடு திரும்பும் வரையுமே இருக்க, அடுத்து வீட்டில் அவர்களுக்கான முதலிரவிற்கான ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்க, அவனை தனிமையில் சந்திக்கும் அந்த இரவு அவளுக்கு பதட்டத்தோடு சேர்த்து பயத்தையும் கொடுத்தது.                            

தொடரும்..

Episode # 02

Go to Verena nee iruppin.. Verethum vendame story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.