பண்ணிட்டா அதோட வேதும் திரும்ப கால் பண்ணாம போனதால வேத் கிட்ட பேச கால் மேல கால் மெசேஜ் மேல மெசேஜ் போட்டு ட்ரை பண்ணா சாரா பட் வேத் கிட்ட இருந்து எந்த ரிப்லையும் வரல ரெண்டு நாள் களிச்சு பாத்தா வேதுக்கும் இனியாவுக்கும் எம் .பி ஈஸ்வரோட சொந்த ஊரான தென்காசிலஅவரோட பாரம்பரியமான பெரிய வீட்ல நெருங்கிய உறவினர்கள் மட்டும் கொண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுடைய ரிசப்ஷன் சென்னை லீ பார்க் ஹோட்டல கிராண்ட்டா சீப் மினிஸ்டர் கவர்னர் மற்றும் பல முக்கியமான பிரமுகர்கள் அரசியல்வாதிகளாம் கலந்து கொள்ள போரங்கன்னு சொன்ன நியூஸ்ஸ பாத்ததும் சாரவோட இதயமே ஒடஞ்சு போச்சு என விக்கி ஸ்ட்ராவை காபியில் கலக்கி கொண்டே கவலையாக கூற இதை கேட்ட மன்வீர்க்கு சாரா மேல் அனுதாபமும் அக்கறையும் அதிகமானது.
ஓ நோ.. அதுக்கப்பறம் என்னாச்சு சாராவும் வேதும் மீட் பண்ணலயா இந்த இன்சிடெண்ட் கப்பறம்?என மன்வீர் கேட்க அது எப்படி மீட் பண்ணாம இருப்பாங்க இது நடந்துஒரு வாரதுக்குகப்பறம் சாரா அர குறையா ஷூட்டிங்க முடிச்சிட்டு சென்னைக்கு வந்து சேந்தா அப்ப ஏர்போர்ட்ல சாராவ பிக் அப் பண்ண நான் போயிருந்தேன் சாராவ கார்ல ஒக்கார வெச்சிட்டு நான் ஒரு முக்கியமான போன் கால் பேச கார விட்டு வெளிய போனேன் அந்த டைம் பாத்து இந்த வேத் வந்து கீயோட இருந்த என் கார ஸ்டார்ட் பண்ணி சாரா ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.... வேதுன்னு சொல்லியும் கார நிறுத்தாம ஓட்டிட்டு போய்ட்டான் அத பாத்துட்டு நான் அந்த கார் பின்னாடி நாய் மாறி ஓட என விக்கி பேசி கொண்டு இருக்கும் மோது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என செல்போன் டோன் அடிக்க என்ன சாராவா காணும்மா என்ன சொல்றிங்க உங்கள நம்பி தான சாராவ விட்டுட்டு வந்தோம் என்ன தான் டூயுட்டி பாக்றிங்களோ நர்ஸ்? நீங்க ரெஸ்ட் ரூம் விட்டு வந்து பால்கனில பாக்கும் மோது அவங்க காரா எடுத்துட்டு கிளம்புனாங்களா?? அவங்க போன நீங்க விட்டுர்வீங்களா ?? சரி விடுங்க நான் பாத்துக்குறேன் என்று விக்கி காலை கட் செய்ய …இதையனைத்தையும் கேட்டு கொண்டிருந்த மன்வீர் டென்ஷன் ஆகாத விக்கி அவங்க எங்க போயிருபாங்கன்னு எனக்கு தெரியும் கார ஸ்டார்ட் பண்லாம் வா என விக்கியின் கையில் இருந்த கார் கீயை பிடுங்கி கொண்டு விறு விறு வென நகர்ந்தான்.
சாரா கவினை பார்ப்பதற்காக அவன் வீட்டிற்கு சென்றாள். கவின் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் சில லைட்டுகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது வீட்டின் ஹாலின் நடுவே ஜெனியின் படம் ஒன்று பெரிதாக வைக்க பட்டு பூமாலை போட பட்டு இருந்தது அதை பார்த்த சாரவிற்கு கண்ணில் தானாகவே கண்ணீர் வந்தது திடீரென கர்ரென்ட் கட் ஆகி விட வீடு இருட்டானது சாராவை சுற்றி இருட்டாகவே இருந்தது. என்ன மன்வீர் சொல்ற ? கவின்