தேன்மொழி ஏன் கடலுக்குள் குதித்தாள் என்று யாருக்கும் ஒன்றும் புரியாததால் கீழ் தளம் விரைந்து படகு ஓட்டுனரிடம் படகை நிறுத்துமாறு கூறிய கெவின் தேன்மொழி கடலில் குதித்து விட்டதை தெரிவித்தான்.
இப்போது நெருப்பு போன்ற எதுவும் யாருடைய பார்வையிலும் படவில்லை.
“போதையில் உங்களுக்கு பிரமை ஏற்பட்டு விட்டதா” படகு ஓட்டுனர் கடிந்து கொண்டார்.
“ஆனால் தேன்மொழி ஏன் குதித்தாள்” என்று விடை தெரியாமல் விழித்தனர்.
படகில் இருந்த இரு டைவர்ஸ் விரைந்து கடலுக்குள் குதித்து தேன்மொழியை நோக்கிச் செல்ல அதிசயமாக அவள் அலைகளில் மிதந்து கொண்டிருந்தாள்.
அவள் மிதந்து கொண்டிருந்த திசையிலேயே நீந்தி சென்றவர்கள் ஓர் பவழப் பாறை மீது மயக்க நிலையில் இருந்தவளை மீட்டெடுத்து படகிற்கு கொண்டு வந்தனர்.
“இதயத் துடிப்பு இருக்கிறது, மூச்சும் சீராக இருக்கிறது. ஆனால் முற்றிலும் மயக்க நிலையில் இருக்கிறாள்” என்று டைவர்களில் ஒருவன் கூற அப்போது தான் அவளது கழுத்து வளைவில் குண்டு பதிந்து இருப்பதைக் கண்டான் இன்னோர் டைவர்.
“இது என்ன” என்று கேட்க படக்குழு இயக்குனர் தலை குனிந்தவாறே கூறினார்.
“மயக்க மருந்து குண்டு. விலங்குகளை பிடிக்க பயன்படுத்துவதால் அதிக டோஸ் உடையது” என்று கூறினான் கெவின்.
படகு கரையை அடைய நடந்ததை அறிந்த இளங்கோ அதிர்ச்சியில் சிலையாகிப் போனான்.
தேன்மொழியை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றான். அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர் இளங்கோவின் கையைப் பற்றிக் கொண்டு மெதுவாக கூறினார்.
“ஐ ஆம் சாரி. ஷி இஸ் இன் கோமா”
தொடரும்
Go to Senthamizh thenmozhiyaal story main page
{kunena_discuss:1218}