விடுவித்தான்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருந்த அதே சமயத்தில், அக்பரின் அரண்மனையில் ஒருவன் அக்பர் முன்னிலையில் நின்று இருந்தான்.
“ஹ,, சொல்லு” என்றுக் கேட்கவும்,
“நம் மகாராணியின் பாராட்டைப் பெற்ற அந்தப் பெண் வெளியில் வந்து நம் வீரர்களிடம் பேசிய விதத்தைப் பார்த்தால் சாதாரணப் பெண்ணாகத் தோன்றவில்லை.”
“ஹ்ம்ம். ஆம்பரில் வேறு என்ன விசேஷம்?”
“ஒன்றும் இல்லை பேரரசரே”
“புதிதாக ஒருவன் புரவிகளை வைத்து விளையாட்டுக் காட்டுகிறான் போலவே?” என்று எடுத்துக் கொடுக்கவும், ஒற்றன் தலை குனிந்தான்.
“ஹ்ம்ம் .சரி .. சரி எல்லோரும் பதேபூர் தானே வருகிறார்கள். பார்த்துக் கொள்ளலாம்” என்றுக் கூறி சிரித்தார் அக்பர்.
இந்த இடத்தில் கிருத்திகா கனவு கலைந்து விழிக்க, அடக் கடவுளே இன்னைக்கும் ஹாப் பேக்ட் பல்பு தானா எனக்கு என்று மனசுக்குள் புலம்பினாள்.
அன்றையக் காலைப் பொழுதில் அனைவரும் ஜெய்பூரின் உள்ள ஹவா மஹால் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் ப்ரித்விராஜ்.. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜன்னல்கள் கொண்ட இந்த மாளிகையில் காற்று எந்த சந்தர்ப்பத்திலும் தவறாமல் வீசும்.
அழகான வேலைப்பாடுடன் கூடிய அரண்மனையை ரசித்த திருப்தியோடு, நல்ல காற்றையும் சுவாசித்த, அனுபவித்த மாணவர்களுக்கு அத்தனை சந்தோஷம்.
ஒரு ஜன்னல் அருகில் சென்று கிருத்திகா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க, அப்படியே பார்த்துக் கொண்டே வருவது போல் ப்ரித்விராஜ் அவள் அருகில் வந்தான்.
“கிருத்தி, உன்னை மூன்று பேர் பாலோ பண்றாங்க. இன்னைக்கு அவங்க கையில் நீ மாட்டிக்க் கூடாது. சோ உன் பிரெண்ட்ஸ் விட்டு எங்கியும் தனியாகப் போகாதே. நாம் கொஞ்சம் பேஸ் நல்லா ரெடி பண்ண பிறகு அவங்க கிட்டே மாட்டிக்கிற மாதிரி பார்த்துக்கலாம்” என்றுக் கூறவும், கிருத்திக்குப் புரை ஏறிற்று. பின் தன்னைச் சமாளித்தவளாக சரி என்று தலை அசைத்து விட்டு, ராகவி இருக்கும் இடம் தேடிச் சென்றாள்.
கிருத்தியின் மைன்ட் வாய்ஸ் “என்னடா இது? கனவில் தான் ஒருத்தன் ஸ்பை வேலையைப் பார்க்க்ரான்னா, நிஜத்திலும் நடக்குதே. எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை” என்று புலம்பிக் கொண்டாள்.
ஹாய் பிரெண்ட்ஸ்.. காணாய் கண்ணே கதையின் தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இன்றைய எபிசொட் காட்சிகள் என் கற்பனையே. நம்ம பிலிம் ஜோதா அக்பரையும், இதையும் கம்பர் செய்து கொள்ள வேண்டாம். அந்த கேரக்டர்களுக்குள் நிகழும் காட்சிகள் என் கற்பனையே. வழக்கம் போல் உங்கள் கருத்துக்களுக்கு காத்து இருக்கிறேன். நன்றி.
தொடரும்!