நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று.
ஒவ்வொரு பகுதியையும் பார்க்க பார்க்க சலிக்கவில்லை மூவருக்கும்.ஷியாமாவுமே சற்று ரசிக்க ஆம்பித்திருந்தாள் என்றே கூற வேண்டும்.எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் எத்தனை ரசனை அந்த காலத்திலேயே என நினைக்காமல் இருக்க முடியவில்லை.ஒரு ஒரு ராணிகளுக்கும் தனித்தனி இருப்பிடம் அனைத்திற்கும் பொதுவாய் அரசரை அவர்கள் சந்திப்பதற்கான இடம் அதிலும் ஒருவருக்கான தனிப்பட்ட நேரத்திற்காக ஒருவர் வருவது மற்றவர் அறியா வண்ணத்தில் படிக்கட்டுகள்,மகாராணி அவைக்கு வருவதற்காக டனல் போன்ற அமைப்பு என ஒவ்வொரு சிறு விஷயமும் நம் கருத்தை கவர்வதாய் இருந்தது.
அனைத்திற்கும் மேலாக அந்த நீண்ட நெடிய பாம்பு போன்ற பாதை அரண் போன்ற சுவர்களோடு பிரமிப்பின் உச்சமாய் இருந்தது.
“தேங்க்ஸ் ஷியாமா ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்களால ஹட் அ நைஸ் டைம்..”
“ஏன் நீங்க இங்கேயே தான இருக்கீங்க அடிக்கடி வர மாட்டீ.களா?”
“எப்பவுமே பக்கத்துல இருக்குறதோட அருமை அதிகமா தெரியாது இல்லையா!”,என்றவன் புன்னகைத்தான்.
“சின்ன வயசுல எல்லாம் இதைப் பார்த்துட்டு நாமளும் ராணியா பொறந்துருக்கலாம்னு நினைச்சுருக்கேன் கா..”
“ஹா ஹா ஏன் இப்பவும் நீங்க எல்லாம் ராஜ வாழ்க்கை தான வாழ்றீங்க அப்பறம் என்ன?”
“ம்ம்..வளர வளர தான் அப்படி இருக்குறதோட கஷ்டங்கள் புரிஞ்சுது..இப்போ எல்லாம் ஏன்டா இப்படி இருக்கோம்னு தான் பீல் பண்றேன்.”
“என்ன ஆஷிக் உன் தங்கச்சி இப்டி சொல்றா?”
“அவ சொல்றதுல தப்பு என்ன இருக்கு ஷியாமா..”
“ஏன் ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க..சொல்லக் கூடாதுனா வேண்டாம்..லீவ் இட்..”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..இங்க வர்மா பேமிலினா அரச குடும்பத்துக்கு அடுத்த மாதிரி தான் இப்பவும்.தாத்தாவோட தாத்தா இங்க ஜமீன்தார் அந்த மாதிரி.சோ இந்த பேர் புகழ் எல்லாம் நேத்து இன்னைக்கு வந்த விஷயம் இல்லை.காலம் காலமா இருக்குறது.
இப்பவும் ஜெய்ப்பூர் ராஜ்புத் பேமிலியோட நாங்க ரொம்வே க்ளோஸ் தான்.எல்லா பேமிலி பங்ஷனுக்கும் எங்களுக்கு இன்வைட் உண்டு.அதனாலேயே சின்ன சின்ன சந்தோஷங்கள் நிறையவே இழந்துருக்கோம்.
எப்பவுமே எங்களைச் சுத்தி பார்டிகாட்ஸ் செக்யூரிட்டினு தான் இருப்பங்க.சொன்னா நம்ப