குடும்பத்துலயே சொத்து பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கும்..”
“தாத்தாவை எதிர்த்து நிக்க யாருக்கும் தைரியம் வரலனு தான் சொல்லணும்.ஆனாலும் பிரச்சனை ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே தாத்தா இறந்துட்டதுனால யாராலயும் அண்ணாகிட்ட எதுவும் கேட்க முடில.இந்த ஒரு காரணத்துக்காகவே தியாவுக்கும் அண்ணாவுக்கும் கல்யாணம் பண்ணணும்னு அத்தை தீவிரமா இருக்காங்க..”
“தேட்ஸ் இன்ட்ரஸ்டிங்..சரி ரொம்பவே டைம் ஆச்சு போலாமா..”,என்றபடியே கிளம்பியவர்கள் வீட்டை அடைந்திருக்க என்றும் இல்லாத அதிசயமாய் மகிழன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.
சிறியவர்கள் இருவரும் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்றுவிட ஷியாமா அவனை நோக்கிச் சென்றாள்.
“ஹலோ மிஸ்டர் மகிழன்..”
தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தவன் அவளை அமருமாறு சைகை செய்தான்.
“இஃப் ஐ அம் நாட் ராங் நீங்க இப்போ வீட்ல இருக்குற டைம் இல்லையே!”
“ம்ம் ஆஷிக் அப்பா மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்துட்டார்..”
“வாட்??”
“யா எப்படி நடந்ததுனு அவருக்கே தெரில..நல்லாதான் இருந்ததா சொல்றார்.யாரோ தள்ளி விட்ட மாதிரி இருக்குனு சொல்றார்.ரியலி ஐ அம் கன்பியூஸ்ட்..என்னை சுத்தி என்ன நடக்குதுனு புரில..”,என்றவன் இரு கைகளாலும் தலையை அழுந்தக் கோதி குனிந்து கொண்டான்.
ஷியாமாவிற்கு ஏனோ அவளறியாமல் ஏதோ ஒரு உந்துதலில் கண்கள் மாடியை நோக்க முன்பு போலவே தன்னை நோக்கியிருந்த விழிகள் சட்டென மறைந்ததைப் போன்று உணர்ந்து தன்னை மறந்து அங்கேயே வெறித்திருந்தாள்.
தொடரும்...