தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 08 - நந்தினிஸ்ரீ
கவின் வீட்டில்....
முகத்தில் சூரியன் சுள்ளென அடிக்க கண்ணை தேய்த்து கொண்டு எழுந்தான் சோபன் சுற்றி பார்த்தால் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இருட்டு அறையில் அவனும் சொம்பியும் அடைக்க பட்டு இருந்தனர். டேய் சொம்பி.... சொம்பி.... எழுந்துரு டா என்ன டா இது இப்ப நம்ம எங்க இருக்கோம் நேத்து என்ன டா நடந்துச்சு என்று அடி வாங்கிய சோர்வில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சொம்பியை எழுப்பினான் சோபன்.ஆன்...தல எழுந்துடீங்களா நம்ம நிலம இப்படி ஆயிடுச்சே தல என சொம்பி அழுது கொண்டே புலம்ப டேய் சொம்பி..... முதல்ல புலம்புறது நிறுத்திட்டு நேத்து என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கு மரியாதையா சொல்லு என சோபன் பட படப்பாக கேட்க ஜெய் வந்தது முதல் சொம்பி உண்மையை உலரியது முதல் நடந்த அனைத்தையும் சோபனிடம் ஒப்பித்தான் சொம்பி.
என்ன டா சொல்ற??? லூசு பையனே அவன் கேட்டான்றதுக்காக எல்லா விஷயத்தையும் இப்படி ஒளரிடுவியாட நம்ம பசங்களாம் என்ன கிளிச்சிட்டு இருந்தாணுகங்க எந்த ஆணிய புடுங்க போனானுங்க??என சோபன் சொம்பியை முதுகில் பட் பட்டென்று அடிக்க தல தல நான் சொல்றத கேளு நான் நேத்து உண்மய சொல்லனா அந்த ஆபீசர் மன்வீரு உன்ன எப்பயோ கொன்னுட்டு போயிருப்பான் இந்நேரம் உனக்கு நான் பால் ஊதிட்டு இருந்திர்பேன் நீ தான் பில்ட் அப்புகாக நம்ம பசங்கள கண்ண காட்டி ஷெட்ட விட்டு அனுப்பிட்ட அதனால தான் நாமா சோலோவா சிக்கிட்டோம் உன்ன காப்பதுன என்ன இப்படி பன்றியே தல கொஞ்சமாவுது யோசி தல என சொம்பி சொன்னவுடன் சோபானுக்கு கிளிக் ஆனது சரி டா இப்ப நாமா எங்க இருக்கோம் இப்ப இங்க இருந்து நாமா எப்படி டா தப்பிக்குறது என சோபன் பதற அது உன்னால முடியாது டா........ என்ற குரல் ஓங்கி கேட்டது திரும்பி பார்த்தாள் மன்வீர் வீர நடை போட்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.
மன்வீரின் கோவமான ஆக்ரோஷமான முகத்தை பார்த்த சோபன் ஆடி போய் அசையாமல் நின்றான். ஏய் இத பாரு ஆபிசரு வேணாம் தேவ இல்லாம என் மேல கைய வெச்சா என சோபன் இழுக்க என்ன ...கைய வெச்சா என்னாகும் என்னடா பண்னுவா பொறுக்கி என சோபனை பிடித்து அருகிலிருந்த கண்ணாடி டைனிங் டேபிளில் தூக்கி போட்டான் மன்வீர் பின் அவனை பிடித்து தர தர வென இழுத்து வந்து ஒரு மூளையில் வீசினான் அங் அங்கே ரத்த ரத்தமாக அவன் முகம்மும் உடம்பும் சிவந்து கிடந்தது.
பயப்படாத இப்ப உன்ன நான் உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன் உன்ன வெச்சி செய்ய வேண்டிய காரியம் நிறைய இருக்கு அது கப்பறம் உன்ன வெச்சிக்குறன் டா என மன்வீர் சொல்லி கொண்டிருக்க மன்வீர் இதுக்கு மேல இவன எதுவும் பண்ணாத இன்னிக்கு இவன