பேசியது… எல்லாமே உண்மைதான்… அவள் அந்த வார்த்தைகளை சொன்ன அந்த நொடி அவன் அதிர்ந்து போனது உண்மை. அதிதி ஏன் அப்படி சொன்னாள்?
“நான் அவருக்கு உண்மையாக இருக்க மாட்டேன்”
அவனை பாதித்தது அந்த மிக மெல்லிய பதில் அல்ல…. அவனுக்கு ஜெனிட்டாவின் நினைவு வந்ததுதான் அதிர்ச்சி.
ம்… அதிதி இந்த வார்த்தைகளை மட்டும்தான் சொன்னாளா? அதற்கு பின்னும் நீட்சியாக சில வார்த்தைகள் வந்தனவா? அவனுடைய நினைவு திரையில் அதிதி பேசிய கணம் நினைவிற்கு வந்தது.
அவள் சொன்ன வார்த்தைகள் அவனால் முழுவதுமாக கவனிக்கப்படாமல் போனாலும் அவனுடைய மனம் அதனை பதிந்து வைத்திருந்தது. மனதை ஒருமுகப்படுத்தி ரீகால் செய்தான். யெஸ்… காட் இட்!
“ நான் அவருக்கு உண்மையாகஇருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. துரோகம் செய்யக் கூடும்… என் அம்மாவைபோல…”
இதற்கு என்ன அர்த்தம்? அதிரதனுக்கு துரோகம் செய்வது என்றால்… ஒரு மனைவியாக நேர்மையாக நடந்து கொள்ள மாட்டேன் என்கிறாள். ம்… ஓகே… ஒருவேளை அவளுக்கு வேறு யாரிடமும் லயிப்பு இருந்திருக்கலாமோ என்று சந்தேகிக்கலாம்.
ஆனால் அவள் ஏன் அம்மாவைப்போல என்ற வார்த்தையை சொன்னாள்? அவளுடைய அம்மா தவறானவரா?
அதிரதனுக்கு அதற்குமேல் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது. இறந்து போனவரை பற்றி தவறாக பேசுவது மட்டுமல்ல நினைப்பதே தலைமுறைக்கும் பாவம் என்று அப்பா சொல்லுவாரே!
இந்த அப்பா…. ஓ…. ஏன் அப்படி ஒன் சைட் அடித்தார்? அவனை விடுத்து அதிதி பக்கம் சாய என்ன காரணம்… அவரும் புதிர்போட்டு பேசினாரே…
“இன்னும் சீராக வேண்டிய விசயங்கள் இருக்கின்றன” என்றாரே. அதிதியின் வாழ்க்கைக்கும் அவனுடைய குடும்பத்திற்கு ஏதாவது தொடர்பு உண்டா?
என்ன கொடுமை இது? அந்த பெண்ணை அவன் முன்பின் பார்த்த்துகூட கிடையாது. அவனுடைய இருபத்தி எட்டாவது வயதில் திடீரென்று மழையில் முளைத்த காளான் போல..
ஆவ்… அதிதியுடனான உறவு மழையில் முளைத்த காளான்போல ஒரே நாளில் அழிந்து போகும் உறவா?… இல்லை… அவனுடைய வாழ்நாள் முழுவதும்… அது என்னவோ சொல்வார்களே…