விரைவில் எதிர்பார்க்கவில்லை. அந்தச் சுரங்கத்தினுள் விழுந்தால், கடைசி வளைவிற்கு வர குறைந்த பட்சம் இரு நாட்களாவது ஆகும். ஆனால் நீ சில மணி நேரங்களிலேயே எப்படி வந்தாய்? இதற்கு முன் இந்தச் சுரங்கத்தினுள் சென்று இருக்கிறயா?” என்றுக் கேட்டார்.
“இல்லை. சுரங்கக் கணக்குகள் தெரியும். “ என்று மட்டும் கூறினாள்.
“ஹ்ம்ம். ராணாவின் வளர்ப்பு பிரசித்திப் பெற்றது தான்” என்றுக் கூறவும்,
“வீண் விவாதங்கள் வேண்டாம் அரசே. என்னைத் தாங்கள் திட்டமிட்டு வரவழைத்தக் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?”
“முன்னரே கூறினேனே. என் அந்தபுரத்தை அலங்கரிக்க” என்றுக் கூறவும்
“ராஜபுத்திரப் பெண்களை அத்தனை சாதரணமாக எடைபோடாதீர்கள். “ என்று பதில் உரைத்தாள்
“ஏன் இல்லை? இதோ உன் சகோதரி ஜோதாவும் என் மனைவி தானே. “
“பல தாரக் கொள்கையினால் நாட்டுக்காக தன்னைத் தந்தவள் ஜோதா. ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. எங்கள் ராஜபுத்திரர்களின் வாட்களும் சும்மா இருக்காது”
ஹ. ஹ என்று சிரித்த அக்பர்,
“உங்கள் ராஜபுத்திரர்கள் வீரர்கள் அல்ல. கோழைகள். அதனால் தான் பெண்ணை மணமுடித்து அனுப்பி, என்னோடு உறவாடுகிறார்கள்”
அக்பரின் பேச்சில் கோபமடைந்த கிரண் தேவி,
“என்ன செய்ய? நேருக்கு நேராக நின்றுப் போர் செய்யாமல் மறைந்து இருந்தும், தர்மத்திற்கு கட்டுப் படாமலும் போர் புரிபவர்கள் இருக்கும் வரை, அதிகாரத்திற்கும், அடக்கு முறைக்கும் சிலர் பணிந்து தான் போவர். ஆனால் அவர்களும் ஒருநாள் திருப்பிக் கொடுக்கும் போது அதன் தாக்கம் அதிகமாயிருக்கும் அரசே” என்றாள்.
“ஹ, ஹ, பயமாக இருக்கிறது “ என்றவர்,
“உன்னோடான விவாதம் போதும். இனி நான் என்ன சொன்னாலும் கேட்கவேண்டும்.” என்றபடி அவள் அருகில் வர, கிரண் தேவி இடத்தை விட்டு அசையாமல் நின்றாள்.
அவள் அருகில் வந்து “ராஜபுத்திரப் பெண்களின் அழகே தனிதான். ஓவியனின் பாவையாய் அழகே உருவாக நிற்கிறாய். “ என்றபடி கிரண் தேவியின் மேல் கையைப் போட்டார் அக்பர்.
அவள் மேல் கையைப் போட்டது மட்டுமே அக்பரின் நினைவு. பின் அவர் தரையில் கிடந்தார். என்னவென்று உணருமுன், அக்பர் கீழே விழுந்து இருக்க, அவரின் தாடையில் கிரண் தேவியின் வாள் கூர் பார்த்துக் கொண்டு இருந்தது.
“பேரரசர் அவர்களுக்கு, தற்போது ராஜபுத்திரப் பெண்களின் வலிமைப் பற்றித் தெரிந்து இருக்குமே. தங்கள் வலையில் விழ நான் மான் அல்ல. வலையைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் பெண் புலி.” என்றுக் கூற, அக்பர் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
தொடரும்!