கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிட்டா, உங்களை கவனிப்பதில் நான் ஏதாவது குறை வைக்கலாம், அப்போ என்மேல நீங்க கோபப்பட்டீங்கன்னா? அப்புறம் குழந்தை உண்டாகிட்டா காலேஜில் சேர முடியாதுன்னு நீங்க தான் சொன்னீங்க, அப்புறம் 3 வருஷம் வரை குழந்தையை தள்ளிப் போட்டா அப்புறம் அது உங்களுக்கு சங்கடமாகிட்டா, நான் படிக்கிறதால தான் இப்படியெல்லாம்னு உங்களுக்கு தோன ஆரம்பிச்சிட்டா?" என்று அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள்.
"இப்படி நாள் முழுக்க வீட்ல தனியா இருப்பதனால் தான் இந்த யோசனையெல்லாம் உனக்கு வருது, அதுக்கே நீ காலேஜ் போய் படிக்கணும்,"
"அய்யோ நானா இதை சொல்லல மாமா, அம்மா தான் ஆம்பிளைங்க மனசு நிலையா இருக்காது, இன்னைக்கு ஒன்னு சொல்வாங்க, அதையே நாளைக்கு மாத்தி சொல்வாங்க, அவங்க சொல்றதை வச்சு நாமளும் முடிவு செய்யக் கூடாதுன்னு சொன்னாங்க," என்று உண்மையை கூறிவிட,
"ஓ இது அத்தையோட போதனையா? நேத்து ஒன்னும் தெரியாம இருக்கன்னு திட்டினாங்க, இன்னைக்கு காலேஜ் போய் படிக்க வேண்டாம்னு சொல்லி குழப்பறாங்க, அவங்க நிலையும் எனக்கு புரியாம இல்ல, மாமா இருந்தும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க, இதில் அவரும் இல்லாம உனக்கு எப்படி நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கப் போறோம்னு ரொம்பவே கவலைப்பட்டிருப்பாங்க,
இப்போ உனக்கு நல்லப்படியா கல்யாணம் முடிஞ்சிருக்க, காலேஜ் போய் படிக்கிறதால நமக்குள்ள எதுவும் பிரச்சனை வந்திடும்னு பயப்பட்றாங்க, அவங்க இப்படி பயந்து படிக்க வேண்டாம்னு சொன்னா, இல்லம்மா மாமா அப்படில்லாம் நடந்துக்க மாட்டாங்கன்னு நீ சொல்றதுக்கென்ன? அதைவிட்டுட்டு நான் அப்படி தான் நடந்துப்பேன்னு நீயும் நினைச்சிட்டல்ல, என்மேல அவ்வளவு தான் நம்பிக்கையா?" என்றுக் கேட்டான்.
"அய்யோ இல்ல மாமா, அம்மா சொல்லவும் கொஞ்சம் குழப்பம் வந்தது உண்மை தான், ஆனா நீங்க அப்படி நடந்துப்பீங்கன்னு நான் நினைக்கல," என்று அவசரமாக அவள் சொல்ல,
"நான் சும்மா தான் சொன்னேன். இங்கப்பாரு நித்தி அத்தைக்கு வந்தது தேவையில்லாத பயம், நீ படிக்கிறதால எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அதனால நீ என்னை கவனிக்கலன்னு நான் குறையெல்லாம் கண்டுப்பிடிக்க மாட்டேன். ஏன் புருஷனை தான் பொண்டாட்டி கவனிக்கணுமா? பொண்டாட்டியை புருஷன் கவனிச்சிக்கக் கூடாதா?
நானே தானே நீ காலேஜ்ல சேர்ந்து படிக்கணும்னு சொன்னேன். அப்புறம் எப்படி நான் மாறுவேன். பொண்டாட்டி படிக்கவோ வேலைக்கோ போக வேண்டாம், வீட்டிலிருந்து எனக்கு