(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவர் என்ன சொல்றது. நானே சொல்றேன். நீங்க ஒரு ஜெம்தான். உங்ககிட்ட பாதுகாப்பை உணர முடியுது. எந்த சந்தர்ப்பதையும் உங்களுக்கு சாதகமா நினைக்காமல் எனக்காக யோசிக்கறீங்க. அப்புறம் பெண்தானேன்னு நினைக்காமல் சகமனுசியாக ட்ரீட் பண்றீங்க. உங்க வீட்டில உங்களை நல்லா வளர்த்திருக்காங்க. அத்தை, மாமா, மகிஅண்ணி எல்லோரும்  நல்ல மனுசங்கநீங்களும் மகி அண்ணியும் பழகறதா பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும்

கண்வச்சிடாதேம்மா. நாங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்கவும் செய்வோம்”

எனக்கு தோணலை

ட்ரஸ்ட் மீஉன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னதும் என்னை திட்ட ஆரம்பிச்சுட்டா. சாப்பாடு போட மாட்டேன்னு ஓடிப் போயிட்டா

பொய்…”

நிஜம். ரொம்ப கொடுமைக்காரி. அவளுக்கு பிடிக்கலைண்னா காபில உப்பு கொட்டி தருவா. மீ பாவம்..”

அப்படியா நீங்க என்ன செஞ்சீங்க…?”

நான் அவளோட லிப்ஸ்டிக்ல கண்வலிக்கு போடற மருந்தை தெளிச்சிடுவேன்அதை கேட்ட அதிதி வாய்விட்டு சப்தம் போட்டு சிரிக்க ஆரம்பிதாள்.

ஐயோ கசக்குமே.”

நாத்தனாரை கொடுமை செய்தேன்னு சொன்னால் என்ன ஒரு சந்தோசம்?”

அப்படி கிடையாது. இது போல சண்டை போடுறதுகூட உறவை பலப்படுத்தும் என்று படிச்சிருக்கேன்.. இந்த மாதிரி உறவுகள் அமையறதுக்கு ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும்  உங்க வீட்டில  அவங்கங்க ரோலை நல்லா உணர்ந்து வாழ்றீங்க

யெஸ்ஆனால் புதுசா வந்த மருமகள்தான் மோசம்

ரொம்ப ரொம்ப மோசம். அதைவிடுங்க. உங்களுக்கும் மகிஅண்ணிக்கும் பிரியம் அதிகம்தானே. ரெண்டு பேரும் பெஸ்ட்

“.அப்படி சொல்ல முடியாது. அதுக்கு முன்னாடியே ஒரு பாசமலர் கதை எங்க வீட்டில் உண்டு.”

மாமாவிற்கும் உங்க அத்தைக்குமா?” கேட்கும்போதே சந்தேகத்தில் குரல் இறங்கி போயிற்று.

தெரியுதுல்லஉனக்கே சந்தேகமா இருக்கு. நான் சொல்றது எங்க அம்மாவைபற்றி”

அத்தைக்கு அண்ணன் இருக்கிறாரா. நான் பார்த்ததே இல்லை.”

இருந்தார். இப்போது இல்லைநான் என் மாமவைப்போல இருக்கேன்னு அப்போல்லாம் அம்மா கொஞ்சிகிட்டே இருப்பாங்க. அண்ணன் அப்படினா அவங்களுக்கு பிரியம் அதிகம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.