என்று ஆவலுடன் கேட்க, அங்கே என்ன நடந்தது என்று அவளே குழம்பி கிடக்கையில் என்ன பதில் சொல்ல முடியும் அவருக்கு.
"ஹான் பார்த்தோம் மா. என்று அங்கே நடந்ததை சொல்லி முடித்தவள் "எனக்கு ஒண்ணுமே புரியலைம்மா. இதெல்லாம் எப்படி நடந்துச்சு...எப்போ நடந்துச்சு..." குழப்பமான அவளின் முகத்தை கண்ட லட்சுமி, "சரி சரி எப்படியோ எல்லாம் நல்லபடியா தானே நடந்துருக்கு. நான் சத்யா வந்ததும் கேக்கறேன். நீ போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு" என அவளை அனுப்பியவர் ஒரு சிறு புன்னகையுடன் சமயலறைக்குள் நுழைந்தார்.
"அக்கா..." தயங்கி தயங்கி தன் முன்னே வந்து நின்ற உமாவை கண்டவள், "என்ன உமா...வா வந்து இங்க உக்காரு" என அவளை அழைத்து தன்னருகே இருத்தி கொண்டாள் .
"அக்கா எங்க ஸ்கூல் ல நெஸ்ட் மந்த் மேத்ஸ்ல ஒரு காம்பெடிஷன் வெக்கறாங்க அக்கா, அதுல கலந்துக்கிட்டு ஜெயிச்சா அடுத்து தேசிய அளவிலான போட்டில கலந்துக்கலாமாம்" உமா தயக்கத்துடன் சொல்ல, "உனக்கு கலந்துக்கணுமா உமா?" என்றாள் பவித்ரா உமாவின் தலையை வருடியபடி.
"ஆசையா தான் இருக்குக்கா. எனக்கு மேத்ஸ் ரொம்ப பிடிக்கும். ஆனா ..." அவள் ஏதோ சொல்ல தயங்க, "என்ன உமா, உனக்கு இன்டெரெஸ்ட் இருந்தா கலந்துக்கோ டா. அதுக்கு என்ன தயக்கம்? ஏதாவது பீஸ் பெ பண்ணனுமா?" பவித்ராவின் கேள்வியில் உமாவின் முகம் மலர்ந்தது.
"எனக்கு இன்டெரெஸ்ட் இருக்குக்கா. ஆனா அதுல கலந்துக்கணும்னா,அப்ப்ளிகேஷன் போரம் வாங்கணும். அப்பறம் அதுக்கு ப்ரீபெர் பண்ண புக்ஸ் வாங்கணும்க்கா" உமாவின் கன்னத்தை செல்லமாக தட்டியவள், "அவ்ளோ தான. நான் வாங்கி தரேன். நீ ஒன்னும் கவலை படாம நாளைக்கே ஸ்கூல் ல உன் பேரும் கொடுத்திரு . சரியா ?" என்றவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட உமா "தேங்க்ஸ் க்கா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் அவளை கட்டி கொண்டு. கதவின் ஓரம் நின்று இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த சத்யாவிற்கு பவித்ராவின் மேல் கொண்ட காதல் இன்னும் இன்னும் கூடியது. மெல்ல தொண்டையை கனைத்தான் சத்யா.
சத்தத்தில் திரும்பிய பவித்ரா "சரி உமா நீ போயி படி" என உமாவை படிக்க அனுப்பிவிட்டு எழுந்து வந்தாள்.
"அம்மா சொன்னாங்க உனக்கு ஏதோ பேசணும்னு...என்ன பேசணும்" என்றவனிடம் எப்படியாவது அவளின் குழப்பங்களுக்கான பதிலை கேட்டு விட வேண்டும் என்று எண்ணி அவனருகே வந்தவளுக்கு எப்படி தொடங்குவது என புரியாமல் "ரொம்ப தேங்க்ஸ்" என்றாள்