கேள்வியில் வேறு சமயமாக இருந்திருந்தால் அவளுக்கு கோவம் வந்திருக்கலாம் ஆனால் இப்போது அவன் இவ்வளவு உதவிகள் செய்ததற்கு அவனின் மேல் அவளுக்கு நன்றி உணர்வு தான் உண்டானது.
"ரொம்ப தேங்க்ஸ் சத்யா. நான் இதெல்லாம்...இதில இவ்ளோ இருக்குனு எல்லாம் எனக்கு தெரியாது. நீங்க பண்ணுன உதவிய நான் மறக்கமாட்டேன்" அவளின் சத்யா என்ற அழைப்பில் மனம் தடுமாறினாலும் அதை கட்டுப்படுத்தியவன், "நீ தேங்க்ஸ் சொல்லணும்னோ இல்லை என் உதவிய மறக்கக்கூடாதுனு எல்லாம் நான் இதை செய்யல. அம்மா கேட்டாங்க. அதுவும் இல்லாம பாவம் அங்க இருக்கும் பெண்கள் எல்லாம். இந்த இடத்தை விட்ட எங்க போவாங்க...அதான் பண்ணேன். இனிமேலாவது இதெல்லாம் நீயே சமாளிக்க கத்துக்கோ. எல்லாத்துக்கும் எல்லா நேரமும் யாரவது என்னை மாதிரி வந்து உதவுவாங்கனு சொல்ல முடியாது" கடைசியில் நறுக்கென தலையில் குட்டியதை போல சொல்லிவிட்டு சத்யா செல்ல, செல்லும் அவனையே பார்த்திருந்தாள் பவித்ரா யோசனையுடன்.
தொடரும்