மெல்லிய குரலில்.
"எதுக்கு?" என்ற சத்யாவின் கேள்வியில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் .
"நீங்க பண்ணுன எல்லாத்துக்கும்...ரொம்ப தேங்க்ஸ். என்னால இதை எல்லாம் தனியா பண்ணிருக்க முடியாது" எப்படியோ அவள் சொல்ல வந்த நன்றியை திக்காமல் திணறாமல் சொல்லி முடித்துவிட்டு அவன் முகம் பார்க்க, அவனோ "ஓ இதுக்கு தான் வர சொன்னியா? ஓகே நோ ப்ரோப்லேம்" என்று விட்டு அங்கிருந்து நகர, "ஐயோ இன்னும் நான் கேட்க வேண்டியதை கேட்கவே இல்லையே" என மனதிற்குள் தன்னைத்தானே திட்டி கொண்டு "இல்லை அது வந்து...உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" ஒரு வழியாக அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வர, திரும்பி அவளை பார்த்தான் சத்யா.
"நான் எப்படி அந்த ஆஸ்ரமத்துடைய டைரக்டர் ஆனேன்?" -பவித்ரா
"ஒரு பொருள் யாருக்குமே வேண்டாம்னா அதை யாரு சொந்தம் கொண்டாடுனாலும் யாரும் கேக்க மாட்டாங்க. அந்த மாதிரி தான். இந்த ஆஸ்ரமம் எங்களுக்கு வேண்டாத விஷயம்னு சகுந்தலாதேவியுடைய ரெண்டு பசங்களும் சொல்லிட்டாங்க. சொன்னதை அப்படியே எழுதி தர சொன்னேன். அதுக்கு அப்பறம் உன்னை அந்த ஆஸ்ரமத்துடைய டைரக்டர்ரா ரெஜிஸ்டர் பண்றது அவ்ளோ கஷ்டமா இருக்கல" -சத்யா
"ஓஹ்...இப்போ எதுக்கு இவ்ளோ அவசரமா என்னை டைரக்டர் ஆக்குனீங்க ?" அவள் கேட்கும் போதே அவளுக்கே புரிந்தது அதற்க்கான பதில் என்ன என்று. அவள் தான் அவன் கமலக்கண்ணனிடம் பேசியதை எல்லாம் கேட்டாளாயிற்றே.
அவளை ஒரு பார்வை பார்த்தான் சத்யா. "கமலக்கண்ணனை பற்றி அவன் பேக் கிரவுண்டை பத்தி கொஞ்சம் விசாரிச்சேன். அவனுக்கு இந்த மாதிரியான ஓனர்ஷிப் இல்லாத ப்ரொபேர்ட்டிஸ் எல்லாத்தையும் டூப்ளிகேட் டாக்குமெண்ட்ஸ் தயாரிச்சு அது மூலமா பணம் பறிக்கிறது தான் வேலையவே வெச்சுருக்கான். நீயோ நானோ போயி கேட்டா கண்டிப்பா நீ யாருனு கேட்பான். அதுக்காக தான் முதல்ல உன்னை சட்ட பூர்வமா அந்த ஆஸ்ரமத்தின் டைரக்டர் ஆக்கினேன். என் அப்பாவுடைய பிரெண்ட்ஸ் நெறய பேர் கவர்ன்மெண்ட்ல பெரிய வேலைல இருக்காங்க. அவங்க மூலமா இந்த லேண்டுடைய பேரெண்ட் டாக்குமென்டஸுடைய காப்பி வாங்கினேன். அவன் கண்டிப்பா சட்டபூர்வ நடவடிக்கைக்கு போகமாட்டான். ஏன்னா அவனுடைய டார்கெட் பணம். சோ அதுக்கான வழியை லாக் பண்ண தான் இதெல்லாம். என்ன ஏதாவது புரிஞ்சுதா?" அவன் சொல்ல சொல்ல பவித்ராவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை இருந்ததா இதன் பின்னால். இதற்காக அவன் எவ்வளவு மெனக்கெட்டிருப்பான் என மலைப்பாக இருந்தது. "என்ன ஏதாவது புரிந்ததா" என்ற அவனின்