தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 12 - சசிரேகா
பாட்டி, மாமா, அத்தை ஆகிய மூவரும் தன் தாயிடம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த வைஷூ ஆதி தன்னை வா என சைகை செய்ய வைஷூவும் அவனுடன் தனியாக உள் அறைக்குச் சென்றாள். அங்கு அவளிடம் விசாரிக்கலானான் ஆதி
”உனக்கு ஒண்ணுமில்லையே வைஷு” என கேட்க அவளோ
“என்ன அத்தான் என்னாச்சி நான் நல்லாதான் இருக்கேன் பாருங்க” என சிரித்துக்கொண்டே சொன்னவளிடம்
”ஏய் வைஷூ நீ கூட என்கிட்ட பொய் சொல்லிட்டியே நான் உன்னை எப்படியெல்லாம் நம்பினேன்” என கோபப்பட்டான்.
”நானா அத்தான் நான் என்ன பண்ணேன்”
”பேசாத உனக்கு வயித்து வலின்னு நீ சொன்னதும் நான் எப்படி ஆடிப்போய்ட்டேன் தெரியு
...
This story is now available on Chillzee KiMo.
...
விட சொன்ன வாக்குதான் பெரிசு, அப்படியிருக்கும் போது நான் எப்படி உன்கிட்ட அந்த மாதிரியெல்லாம் நடந்துக்குவேன் நீயே சொல்லு உன் அத்தான் வாக்கு மீறி நடந்துக்கிட்டா உனக்கு பிடிக்குமா சொல்லு”