வருஷம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்திருக்கிறீர்கள்!"
" உன்னை நான் இதற்குமுன் பார்த்ததே இல்லையே!"
" பார்த்தீர்கள், நடுத்தெருவில், நிர்வாணமாக! தெருவில் கூடிநின்ற அத்தனை பேரும், அந்தக் கொடூரன் என்னை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததை பயத்தில் உறைந்துநின்று பார்த்தபோது, நீங்க ஒருத்தர்தானே, என் மானத்தைக் காக்க, அவனுடன் சண்டை போட்டு, அவன் கையிலிருந்த அரிவாளாலேயே, அவனை கண்டதுண்டமாக வெட்டி, அவன் தலையை கையில் எடுத்துக்கொண்டு காவல்நிலயத்தில் சரண் அடைந்தீர்கள்? உங்களை இத்தனை வருஷமாக மனதிற்குள்ளே தெய்வமாகப் பூட்டிவைத்திருந்தேன்....."
மேற்கொண்டு பேசமுடியாமல் மயக்கமுற்று கீழே விழுந்தாள்!
அருகிலிருந்த கடையில் சோடா வாங்கிவந்து, அவள் முகத்தில் தெளித்து, கண் விழித்தவுடன், அவளை தட்டி எழுப்பி, " சரி, சரி, உன் வீட்டுக்குப் போய்வாம்மா!" என்றார்.
" ஐயா! எனக்காக உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த தங்களை, நடுவீதியில் நிறுத்திவிட்டு, எப்படி நான் நிம்மதியாக வாழமுடியும்? தங்களை கவனித்துக் கொள்ளவேண்டியது, என் கடமை இல்லையா? என்னுடன் என்வீட்டுக்கு வந்து, தங்கி, சில நாட்கள் ஓய்வெடுத்தபிறகு, உங்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்!"
" இறைவா! இதுதான், உன் வழிகாட்டுதலா?"
இருவரும் அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது, இரண்டு பெண்கள் ஓடிவந்து இருவரையும் வரவேற்றனர்!
" வாங்க ஐயா! வாம்மா!"
" காயத்ரி! முதலில் ஐயா, குளிக்க ஏற்பாடு செய்! அவருக்கென, ஓர் அறையை ஒழித்துக் கொடு! இனி அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளவேண்டியது, உன் பொறுப்பு! மாதவி! அவருக்கு உணவு வேளாவேளைக்கு கிடைக்கச் செய்வது, உன் பொறுப்பு! சரியா?"
இரு பெண்களும் உற்சாகமாக தலையாட்டினர்.
அவர்களின் உற்சாகத்தை கவனித்த, சகாதேவனுக்கு புரிந்தது, தான் பெற்ற செல்வங்களை பண்பு மிகுந்தவர்களாக வளர்த்திருக்கிறாள், என்பது!
" ஐயா! என் பெயர் கண்ணகி! எது வேண்டுமானாலும், என்னிடம் சொல்லுங்கள்!"
சகாதேவன் புன்னகை புரிந்தார்!
அங்கிருந்த நாற்காலியில், கைப்பையை வைத்துவிட்டு, எதிரிலிருந்த சத்ய சாயிபாபாவின் படத்தை நோக்கி கைகுவித்தார்.
"ஐயா! சுவாமியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?"