(Reading time: 8 - 15 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

வாயடைச்சிட்டாங்க!"

" இவர்மேலே எப்படி பழி சுமத்தினாங்க?"

" அந்த ரௌடிக்கும் இவருக்கும் ஏற்கெனவே விரோதம்! அதனாலே, அவனை இவரு வெட்டிட்டுட்டாருன்னு, கதையை மாத்திட்டாங்க!"

" பாவம்மா, இவரு!"

" அந்த தெய்வத்துக்கு தெரியலியே, சிறையிலே தள்ளிடுச்சே, அதை நினைச்சா, வெறுப்புத்தான் வருது.....சரி, சரி, குளிச்சிட்டு வராமாதிரி சத்தம் கேட்குது, ஒண்ணும் பேசாதீங்க! போங்க, போங்க!"

மௌனமாக மறுபடியும் சத்ய சாயிபாபாவின் படத்துக்கு முன்பு, கைகூப்பி வணங்கிவிட்டு, நாற்காலியில் அமர்ந்தார், சகாதேவன்.

" சாப்பாடு, தயார்! ஐயா! வாங்க! அம்மா! நீயும் தான்!"

சாப்பிட்டு முடித்தவுடன், சகாதேவன், தன்னிடமிருந்த பணத்திலிருந்து, ஆயிரம் ரூபாயை எடுத்து, தாயிடம் கொடுத்து, " உன் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது, வாங்கிக் கொடு, என் நினைவா இருக்கட்டும்! நல்ல குழந்தைங்க, நல்லா வளர்த்திருக்கே!.....எல்லாருக்கும் மிக்க நன்றி! நான் கிளம்பறேன்!"

"என்னய்யா இது? அதற்குள்ளே கிளம்பிட்டீங்க? எங்களுடன் கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு, போகலாமே!"

" பிறகு நிச்சயம் வருகிறேம்மா!"

தொடரும்...

Go to Vazhve Maayam story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.