"அந்த ஆராய்ச்சியாளன்… "
"அவர்தான் இறந்து போய்விட்டாரே"
"நீ சர்மாவை சொல்ற… இன்னொருத்தனை மறந்துட்டியே"
"யார்…. ம்… அந்த ஜேக்… அவன் மேல என்ன தப்பு… அவனோட சீஃப் சொன்னதை செஞ்சான்."
"இல்ல… உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?"
"அவன் வேறு யாரோவோட கையாள்.அவன் ஒருத்தன் கிட்ட பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன்."
" எப்போ பேசிகிட்டு இருந்தான்?."
" கடைசி நாளில்… என் கொலை பண்ணா பார்த்தப்ப… அப்போ நான் வாயில் ரத்தம் கக்கிட்டு இருந்தேன். அந்த ஷர்மா வந்து அழுதுட்டு அங்கிருந்து வெளியே போயிட்டாரு. அப்போ அவன் பேசிக்கிட்டு இருந்தான்"
"என்னன்னு ?"
"அவன் சொன்னான்…. நான் என்ன செஞ்சேன்னு கேள்வி கேட்கறீங்களா…?. நான் ரொம்பவும் முயற்சி பண்ணி அவருடைய ஆராய்ச்சியை தடுக்க பார்த்தேன். அவர் முதலில் எலிக்கிட்ட சக்சஸ் பண்ணிட்டாரு. அப்புறம் குரங்கு வைத்துக்கூட சக்சஸ் பண்ணினார். மனுஷன் கிட்ட வைக்கிறதுக்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தார். அதையும் அவர் சக்ஸஸ் பண்ணிருப்பாரு. அரசு அனுமதி கிடைக்க கொஞ்சம் லேட் ஆச்சு.. அவர் ஆராய்ச்சி மையத்துல வச்சு மனுசங்க மேல இதை டெஸ்ட் செஞ்சார்னால்… அத்தனையும் ரெக்கார்டிங் ஆயிடும். நம்மால தடுக்க முடியாது. அப்பதான் நான் குறுக்க வந்து அனுமதி கிடைக்காது சார்னு சொல்லிட்டேன். இநத குழந்தை வச்சு ஆராய்ச்சி பண்ற ஐடியாவை செயல்படுத்தினேன். அப்புறம் அந்த குழந்தைக்கும் சக்சஸ் ஆயிருக்கும். நான்தான் இடையிலே புகுந்து குளறுபடி பண்ணிட்டேன். இப்போ அந்த ஸ்பெசிமன் ஸ்கின் கேன்சர்.. ப்ரிட்டில் போன்.. லிவர் ப்ரப்ளம்னு வந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதோட பிஸிக்கல் குணம் மாறி விட்டது. இப்பொழுது நான் அதை அழிக்க மருந்து கொடுத்து விட்டேன். இதற்கு சர்மா ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல்