இலக்கியா சற்றே மெதுவான குரலில்.
"ஏன் பெரு ஊரெல்லாம் கிடையாதா?" தமிழ் மீண்டும் கேட்க, "அவரு பேரு பரத். சென்னை தான் அவரு நாட்டிவ். அம்மா அப்பா இல்லை., பாட்டி மட்டும் தான்" அவள் சொல்ல சொல்ல, இவள் சொல்லும் பரத் தான் வேலை பார்க்கும் இடத்து பரத்தா என்ற குழப்பம ஏற்பட்டது தமிழுக்கு.
"அவங்க வீடு எங்க இருக்கு?" என்றவளுக்கு அந்த வீடாக இருக்க கூடாது என்ற பிரார்த்தனையுடன் இலக்கியாவை பார்க்க, தன்னுடைய கல்லூரி பேகை எடுத்தவள் அதில் இருந்து ஒரு கார்டை எடுத்து அவளிடம் நீட்ட, அவளின் பிரார்த்தனையை எல்லாம் தவிடு பொடியாக்கியாது அதில் இருந்த விலாசம்.
அவளை நோக்கி கேவலமாக பார்க்கும் ராமின் பார்வை ஒரு பக்கம், அவளை நம்பிக்கையோடு பார்க்கும் விசாலம் பாட்டி மறுபுறம், அவளையே ஆதரவாக எண்ணி நிற்கும் கலைவாணி ஒரு புறம் என, இனி எப்படி இதை சமாளிக்க போகிறோம் என புரியாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் தமிழ்செல்வி.
தொடரும்
Next episode will be published on 20th June. This series is updated weekly on Saturday mornings.