தொடர்கதை - பிரியமானவளே - 05 - அமுதினி
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
மருத்துவமனையில் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்த அசோக்கின் முகம் அவன் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை காட்டியது. காலையில் அவன் அப்பா அவன் திருமணத்தை பற்றி பேசியது தான் அந்த யோசனைக்கு காரணம்.
அவருடைய நண்பரின் மகளை மணக்க கேட்டிருந்தார். ஆனால் திருமணம் பற்றி சொன்னதும் அவனுக்கு தமிழ்செல்வியின் முகம் தான் டக்கென கண் முன்னே நின்றது. அவனுக்கு அவளை பிடித்திருந்தது. அவளின் அமைதியான சுபாவம், அழகு, பொறுமை என எல்லாமே பிடித்திருந்தது. ஆனால் அவளை பற்றி அவனுக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியாது. அவளுக்கு இதில் விருப்பம் இருக்குமா என்றும் சரியாக சொல்ல முடியாமல் அவரிடம் இரண்டு நாள் நேரம் கேட்டிருந்தான். ஆனால் அவனுக்கு தமிழ் முன் நின்று அவளின் முகம் பார்த்து இதை எப்படி சொல்லுவது என தெரியவில்லை. அதை தான் யோசித்து கொண்டிருந்தான்.
"ஹலோ டாக்டர், மே ஐ கம் இன்???" என்றபடி அந்த அறை கதவை தட்டிவிட்டு தலையை உள்ளே நீட்டி கேட்டான் ஒருவன்.
தன்னுடைய யோசனையில் இருந்து விடுபட்ட அசோக், எதிரே இருந்தவனை பார்த்து புன்னகையுடன் தலை அசைத்தான்.
"என்ன விஷ்வா, உனக்கு டியூட்டி டைம் முடியலையா?" என்றபடி எதிரே அமர்ந்தவனை கேட்டான்.
"இல்லை டாக்டர். இன்னைக்கு ஓடில நைட் டியூட்டி. கொஞ்சம் எக்ஸ்டெண்ட் ஆயிடுச்சு." என்றவனை கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு கேட்டான் அசோக்.
"கொஞ்சம் இல்லை. இட் இஸ் நைன் தேர்ட்டி நவ். நிறையவே எக்ஸ்டெண்ட் ஆயிருக்கு".
"பரவால்லை டாக்டர். அதனால தான உங்களை பார்க்க முடிஞ்சுது. நீங்க கொஞ்சம் பிரீயா கிடைக்கறதே பெரிய விஷயம்" விஸ்வம் சொல்ல, "டேய்... என்ன ஒரே ஐஸா இருக்கு" என்றான் அசோக் சிரிப்புடன்.
விஷ்வா அந்த மருத்துவமனையின் இளம் மருத்துவர். அசோக்கை விட ஜூனியர். அசோக்கின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவனை தன்னுடைய ரோல்மாடல் ஆக்கி கொண்டான்.
அவனிடம் பேசி கொண்டிருக்கையில் தான் அசோக்கிற்கு நினைவிற்கு வந்தது அன்று தமிழ்செல்வி இவனுடன் தானே பேசி கொண்டிருந்தாள் என. அவளை பற்றி இவனிடம் கேட்டாள் என்ன?? அவளின் குடும்ப சூழ்நிலை தெரிந்தால் இன்னும் கூட அவனால் அவளிடம்