சொன்னாலும் சொல்லுவான்...இதெப்படி சாத்தியம்...இந்த திருமணம் நடக்க கூடாது என இவள் மறுக்க ராமை தவிர வேறு காரணம் ஒன்றும் வேண்டாமே...வார்த்தைகளை கோர்த்து பாட்டியிடம் சொன்னாள்.
"பாட்டி உங்க பேரனுக்கு இதெல்லாம் பிடிக்காது... நீங்க ஆசைப்படற மாதிரி அவரு நினைக்கனும்னு இல்லையே" தமிழ் சொல்ல, "ஐயோ செல்வி, இதை எனக்கு சொன்னதே ராம் தான். அன்னைக்கு உன்னை அப்படி அவமானமா பேசுனதுனால நான் கூட அவன் கிட்ட இதை கேட்க தயங்குனேன். ஆனா அவன் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறதா சொன்னான். உன்னை அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னான்" பாட்டி சொல்ல, இதை சத்தியமாக எதிர்பார்த்திராத தமிழ் அதிர்ச்சியில் அங்கேயே சிலையாக "இப்போ உனக்கு சம்மதம் தான?" என்ற பாட்டியின் கேள்விக்கு இவளின் மௌனத்தை அவர் வெட்கமாகவும் சம்மதமாகவும் எண்ணி அங்கிருந்து வெளியேற ஒரே நாளில் வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக இத்தனை அதிர்ச்சிகளா???? அவள் அதிர்ந்து போயிருந்தாள்.
அசோக் அவன் விருப்பத்தை தமிழிடம் சொல்லும் வாய்ப்பை பெறுவானா??? சட்டென இப்படியொரு மாற்றம் ராமிடம் வர என்ன காரணம்??? தமிழ் யாரை மணப்பாள்? அவளின் அந்த இறந்த காலம் என்ன? காத்திருப்போம்....
தொடரும்
Next episode will be published on 27th June. This series is updated weekly on Saturday mornings.