தெளிவாக பேச முடியலாம் அல்லவா??? அதை அவளிடமே கேட்டு தெரிந்து கொண்டு பேச அவனுக்கு நேரம் இல்லை இப்போது. முடிவெடுத்தவன் விஸ்வாவிடம் கேட்டான்.
"விஷ்வா அன்னைக்கு நீ பேசிட்டு இருந்தியே உன் கிளாஸ்மேட் தமிழ்செல்வி, அந்த பொண்ணு இப்போ என் பிரென்ட் வீட்ல தான் ஒர்க் பண்ரா " அவன் சொல்லி முடிக்கும் முன் "ஹ்ம்ம் எனக்கே அது தெரிஞ்சு ஷாக். எப்படி பட்ட பாமிலி பொண்ணு இப்போ இப்படி இருக்கறது…." விஷ்வா சொல்ல, அசோக்கிற்கு குழப்பம். அவனுக்கு தெரிந்து அவள் ஒரு நடுத்தரகுடும்ப பெண், வசதி இன்மையால் படிப்பை நிறுத்தி விட்டாளோ என எண்ணி கொண்டிருந்தான். ஆனால் இவன் என்ன சொல்லுகிறான்???
"ஏன் என்னாச்சு?" அசோக் கேட்க, விஷ்வா தமிழ்செல்வியை பற்றி அவனுக்கு தெரிந்த விஷயங்களை சொல்ல தொடங்கினான்.
அவன் சொல்ல சொல்ல இதெல்லாம் அசோக் நினைத்தே பார்த்திராதது என புரிந்தது. சினிமாவை விட வாழ்க்கையில் எத்தனை திருப்பங்கள் என தோன்றியது.
சொல்லி முடித்த விஷ்வா, அமைதியாக இருந்த அசோக்கிடம் சொன்னான்.
"நான் அவளை மூணு வருஷம் முன்னாடி பார்க்கும் போது அவ இப்படி ஒரு முடிவை எடுப்பானு நினைக்கவே இல்லை. அவ மேல ஒரு பெரிய மரியாதையே வந்துருச்சு. இப்படி கூட ஒரு பொண்ணு இருக்கமுடியுமானு. ஷி ஐஸ் கிரேட் சார்" விஷ்வா சொன்னது போல தான் அசோக்கும் எண்ணினான். அவளின் மேல் இருந்த மதிப்பு இன்னும் இன்னும் கூடியது. அவள் விரும்பினால் இந்த கல்யாண பேச்சை துவங்கலாம் என்று எண்ணியிருந்தவன் எப்படியாவது அவளை மணந்து அவளுக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்பினான்.
விசாலம் பாட்டியின் வீட்டை நோக்கி ஆட்டோ செல்ல, அதில் அமர்ந்திருந்த தமிழ்செல்வியின் முகம் முழுதும் பதற்றமும் பயமும் அப்பியிருந்தது.
பரத் என அறிந்ததும் அவளுக்குள் உருண்ட அந்த பயப்பந்து இன்னும் அவளின் தொண்டைக்கும் வயிறுக்கு இடையே அடைத்து கொண்டு நிற்பதை போல உணர்ந்தாள்.
பரத்தின் பெயரை இலக்கியா சொன்னதும் அதிர்ந்து போனவளை பார்த்த கலைவாணிக்கும் பயம் தொற்றி கொண்டது.
"தமிழ், அவங்க எவ்ளோ பெரிய குடும்பம். இதெல்லாம் நடக்குமா? எனக்கு பயமா இருக்கே..."கலைவாணி பயப்படவும், "அம்மா பயப்படாதீங்க. விசாலம் பாட்டி ரொம்ப நல்லவங்க. ஏழை பணக்காரன் எல்லாம் பாக்க மாட்டாங்க. நான் பேசறேன்" என்று அவரை சமாதான படுத்த சொன்னாலும் ராமை எண்ணி தமிழ்செல்விக்கும் உள்ளே ஒரு நடுக்கம்