தொடர்கதை - பிரியமானவளே - 06 - அமுதினி
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
அந்த பெரிய கம்பனியின் உள்ளே நுழைந்த தமிழ்செல்வி அங்கிருந்த வரவேற்பாளரிடம் சென்றாள்.
"எக்ஸ்கியூஸ் மீ மேடம்" தமிழின் அழைப்பில் நிமிர்ந்த அந்த பெண் ஒரு ரெடி மேட் புன்னகையுடன் அவளை வரவேற்றாள்.
"ஹலோ மேம், ஹௌ கென் ஐ ஹெல்ப் யூ?"
"ஐ வாண்ட் டு மீட் மிஸ்டர் ஸ்ரீராம்" என்றாள் தமிழ்செல்வி.
"அப்பாய்ன்ட்மென்ட் பிக்ஸ் பண்ணிருக்கீங்களா மேம்?" அந்த பெண் அவர்களின் நடைமுறை கேள்வியை கேட்க, "இல்லை, ஆனா அவருக்கு என்னை தெரியும். தமிழ்செல்வினு சொல்லுங்க. அவருக்கு தெரியும்" என்றவளை சில நொடிகள் பார்த்த பெண் அங்கிருந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில நொடிகள் பேசியவள், "மேம் சார் ஒரு மீட்டிங்கில் இருக்காரு. உங்களை ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ண சொன்னாரு" சொல்லவும் சரி என்று விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
நேற்று பாட்டி சொன்ன விஷயத்தில் அவள் அதிர்ந்து போனாலும் விசாலம் கிளம்பும் முன் அவரிடம் ஓடியவள், ராம் சாரிடம் பேசிவிட்டு தன்னுடைய முடிவை சொல்லுவதாக சொல்லியிருந்தாள். அதுவரை தன்னை பற்றி எதுவும் அவனிடம் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொண்டாள்.
அவளுக்கு நூறு சதவீதம் அவன் தன்னை பழிவாங்க எண்ணியே இந்த திருமணத்தை நடத்த சொல்லியிருக்கிறான் என்ற எண்ணம் இருந்தது. என்னை திருமணம் செய்து கஷ்டப்படுத்தி அதன் மூலமாக என்னை பழி வாங்க எண்ணியிருந்தால் அவனுடைய வாழ்க்கையும் அல்லவா அதில் சேர்ந்து பாதிக்கப்படும் என்று வருந்தியவள், அவனிடம் நேரில் சென்று மன்னிப்பை கேட்டுவிட்டால் அவன் மனமும் ஆறும், அவனும் தன்னுடைய முடிவை மாற்றி கொள்ளுவான். அவன் சொன்னதை போல அவனை போல பணக்கார மற்றும் "தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலருக்கு" பெண் கிடைப்பதென்ன கஷ்டமா....என்று எண்ணி கொண்டு தான் இங்கே வந்திருக்கிறாள். அப்படி அவன் தன்னை திருமணம் செய்து கொள்ளாத சூழ்நிலையில் தன்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டியதில்லையே என்று எண்ணித்தான் அவளை பற்றி அவனிடம் சொல்ல வேண்டாம் என்றிருந்தாள். இலக்கியா வாழப்போகும் இடம், அவள் சந்தோசமாக வாழ வேண்டும் அதற்க்காக ஒரு மன்னிப்பை கேட்பதில் அவள் ஒன்றும் குறைந்து போகப்போவதில்லையே...
அவள் இப்படி எதையெதையோ யோசித்து கொண்டிருக்க, அதற்குள் அந்த வரவேற்பில் இருந்த பெண் இவளை உள்ளே செல்லுமாறு சொல்லவும் எழுந்து தான் அணிந்திருந்த சுடிதாரின்