கங்கிராட்ஸ் தமிழ்" என்றான் அசோக்.
"தேங்க்ஸ் அசோக். அப்பறம் நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னிங்களே...என்னுடைய விஷயத்தையே பேசிட்டு இருக்கோம்" என்று தமிழ் சொல்லவும் தனக்காக வைக்கப்பட்டிருந்த காபியை எடுத்தவன் "ஆறி போயிடுச்சு...குடிக்கமுடியாது" என அதை ஓரமாக வைத்து விட்டு "லீவ் இட் தமிழ். கெளம்பலாமா? உனக்கு நேரம் ஆகுது" என்றவன் இருக்கையில் இருந்து எழவும் அவன் என்ன சொல்ல வந்திருப்பானாயிருக்கும் என யூகிக்க முடியாத அளவுக்கு தமிழ்செல்வி ஒன்றும் முட்டாள் அல்லவே...கிட்டத்தட்ட அவன் எதை பற்றி பேச வந்திருப்பான் என அவளுக்கு புரிந்தது.
அதற்க்கு மேல் அதை வற்புறுத்தி கேட்பது எந்த வகையிலும் உதவாது என புரிந்து கொண்டவள் அவனை தொடர்ந்து வெளியே நடந்தாள்.
அவர்கள் இருவரும் வெளியே ஒன்றாக வர அதை அந்த மாலின் மேல் தளத்தில் இருந்து பார்த்த ராமின் கண்கள் கோபத்தில் கோவை பழ நிறம் கொண்டது.
அசோக்கை பொறுத்தவரை அவன் பார்த்ததில் மிக சிறந்த குணமும் பண்புகளும் கொண்டவள் தமிழ்செல்வி. அதனாலேயே அவனுடைய அப்பா திருமணம் பற்றி கேட்டதும் அவள் போன்ற பெண் வேண்டுமென தோன்றியது, அந்த எண்ணம் ஏன் அவளாகவே இருக்க கூடாது என மாறவும் அவளிடம் பேச முடிவு செய்தான். அவளை பற்றி அறிந்ததும் தனக்காக மட்டும் அல்ல அவளுக்காகவும் அவளின் சந்தோசத்திற்காவும் அவளை மணக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அவளுக்கு ராமுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது அறிந்ததும் அவன் மனம் இப்போது அவனின் தோழிக்காக யோசிக்க தொடங்கியது.
ராமை பற்றியும் அவனின் இப்போதுள்ள பழக்கவழக்கங்களை பற்றியும் பாட்டியும் தமிழும் அறிய வாய்ப்பில்லை. ஆனால் அதெல்லாம் தெரிந்திருந்தும் தடுக்கமுடியாத எல்லைக்குள் அசோக்கை நிறுத்தி இருந்தான் ராம். ஆனால் இப்போது அவன் தமிழை மணக்க இருப்பதை அறிந்ததும் ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது அசோக்கிற்கு. அவள் நிச்சயம் சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டும் முடிவு செய்தவன் நேரத்தை பார்த்தான். இரவு ஒன்பதரை மணி என்றது.
காரை எடுத்து கொண்டு ராமின் வீட்டை நோக்கி பயணப்பட்டான். அசோக் வரும் போது ராம் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான்.
அசோக்கை கண்ட ராமின் பார்வையில் நொடிப்பொழுதில் கோபம் தோன்றி மறைந்தது.
"வா அசோக். சாப்டரையா???" என்றவன் அங்கிருந்த இன்னொரு தட்டை நகர்த்தி வைத்தான்.
"இல்லை ராம். இப்போ தான் சாப்பிட்டேன். நீ சாப்பிடு. பாட்டி, பரத் எல்லாம் எங்க?" அவன்