கலைவாணியின் எதிர்காலத்திற்கு என கொஞ்சம் பணம் இது தான் அவளின் லட்சியமாக இருந்தது. அதற்க்கு பின் அவளுக்கு என எதிர்காலம் ஒன்று வேண்டும் என்றெல்லாம் அவள் எண்ணியிருக்கவில்லை. அனால் இன்று அவள் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை பார்த்தாள். அதற்க்கு உள்ள மரியாதையை அவன் அறியாமல் இருப்பது அவளுக்கு சற்றே வருத்தமாக இருந்தது. அவளுக்கு குளிர வேண்டும் என ஏசியை இப்படி வைத்து விட்டு உறங்கும் அவனை கண்டாள்.
"எனக்கு வர ஹஸ்பண்ட் எப்படி இருக்கணும் தெரியுமா? இந்த தமிழ் தான் உலகம்னு சொல்லணும்...எனக்கு குளிரூனா போர்வையா இருக்கணும். எனக்கு வியர்த்தா விசிறியா இருக்கணும். என்னை பூ மாதிரி கைல தாங்கணும். அம்மா மாதிரி கொஞ்சனும். அப்பா மாதிரி அதட்டணும். பிரென்ட் மாதிரி என்னை புரிஞ்சுக்கணும். அவருக்கு நான் தான் உலகம் எனக்கு அவரு தான் எல்லாமுமா இருக்கணும்" அவள் கல்லூரியில் தோழிகளிடம் வாயாடியதை எண்ணி அவள் உதட்டோரம் இப்போது ஒரு புன்னகை படர்ந்தது. இந்த வாழ்க்கை தான் எப்படி எப்படி எல்லாம் பாதையை மாற்றுகிறது என... இது ஒன்றும் இனி பூக்கள் போர்த்திய பாதையாக இருக்காது என்று புரிந்தது அவளுக்கு.
இலக்கியாவின் கோவம் ஒருபுறம், ராமின் வெறுப்பு ஒருபுறம். தமிழ் இதை எப்படி சமாளிப்பாள்? ராம் எப்போது தமிழை புரிந்து கொள்வான்?
தொடரும்
Next episode will be published on 4th July. This series is updated weekly on Saturday mornings.