Page 12 of 34
அதை கேட்டு அதிர்ந்த போன அதிரதன் அவசரமாக மறுத்து ஏதோ சொல்ல வர,
“ரதன்..ரூம்க்கு உள்ள வா.. எல்லாம் பேசிக்கலாம்.. “ என்றவர் வேகமாக மணமகன் அறைக்குள் சென்று விட்டார்..
அதற்குள் ஓரளவுக்கு நடந்து கொண்டிருந்ததை ஊகித்திருந்த நெடுமாறனும் மனோகரியும் அதிரதனுக்கு மேல் அதிர்ந்து போய் மேடை ஏறி வந்தவர்கள் தேவநாதனை பின் தொடர, விறைத்து கொண்டு நின்றிருந்த அதிரதனை மனோகரி ... அப்படியே அமர்ந்து கொண்டனர்..
This story is now available on Chillzee KiMo.
...
எல்லார் பார்வையும் மணமேடையில் அமர்ந்து இருந்த நிலவினியை தீண்டியது.. அவளோ தலையை குனிந்து கொண்டிருந்தாள்.. தேவநாதன் அவளை எழக் கூடாது என்று சொல்லிவிட,