கந்தசாமிக்கு தங்கள் மகன்களின் ஒற்றுமை கண்டு பெருமிதமாக உணர்ந்தார்.
மூத்தவர் ராமச்சந்திரன் உணவு விடுதி, தங்கும் விடுதி என்று தங்கள் தொழிலைப் பெருக்கிக்கொண்டார். அடுத்தவர் ஜெயச்சந்திரன் ஜவுளித்தொழில். அடுத்தவர் சிவச்சந்திரன் நகைக்கடை.
அடுத்தவர் தொழிலைப் பெருக்க மற்றவர்கள் யோசனைகள் வழங்குவர். அவர்களின் பிள்ளைகளிடமும் தங்கள் தந்தைகளைப் போன்ற ஒற்றுமை உண்டு.
மகாலட்சுமியின் அண்ணன்களில் மூவரில் இருவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவர்களுக்கு பிறந்ததும் ஆண் குழந்தைகள்தான். அதனாலேயே மகாலட்சுமியின் மீது அவர்களின் அன்பு அதிகமாக இருந்தது.
அதுவும் கந்தசாமிக்கு தன்னுடைய அன்னையே தன் பேத்தியாக வந்து பிறந்திருப்பதாக ஓர் எண்ணம். அவள் தோற்றத்திலும் கந்தசாமியின் அன்னையை ஒத்திருந்தாள். அதனாலேயே தன் அன்னையின் பெயரான மகாலட்சுமி என்ற பெயரையே பேத்திக்கும் வைத்துவிட்டார்.
மகாலட்சுமியின் பெயரில் உணவு விடுதியுடன் கூடிய தங்கும் விடுதியை தனது பரிசாகத் தந்திருக்கிறார் கந்தசாமி. அவளும் அதற்கான படிப்பையே தேர்ந்தெடுத்து படிக்கிறாள். இளநிலைப் படிப்பை தங்கள் ஊரிலேயே படித்து முடித்தவள் மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்திருக்கிறாள்.
அதுவும் அவள் ஜாதகத்தில் இருந்த பிரச்சினையால்தான் அவளை இங்கே வர அனுமதி கொடுத்திருக்கிறார்கள் அவள் வீட்டினர்.
இதோ இன்னும் சில நாட்களில் பருவத் தேர்வுகள் தொடங்கப்போகின்றன. அவளை மீண்டும் கொண்டாட அவள் வீட்டினர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவளுக்குத் திருமணயோகம் வந்துவிட்டதாக அவர்கள் குடும்ப ஜோசியர் கூறிவிட்டார். அத்துடன் இப்போது அவளின் திருமணம் நடைபெற்றால்தான் உண்டு. இல்லை யென்றால் இன்னும் நான்கு வருடங்களாவது ஆகும் என்று அவர் கூறியதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்களுக்குப் பயம் கண்டுவிட்டது.
இப்போது வந்திருக்கும் திருமண யோகத்திலேயே அவளின் திருமணத்தை முடித்துவிடலாம் என்று தீவிரமாக அவளுக்குப் பொருத்தமான அந்த வரனைத் தேட ஆரம்பித்துவிட்டனர்.
வளர்மதி மகள் பருவம் எய்திய பிறகு மிகவும் கவனமாக இருந்தாள். அடிக்கடி பெரியவர்கள் மகாலட்சுமியின் திருமணம் பற்றிக் கவலைப்படுவதை வளர்மதி அறிவாள். அவள் பிறந்த உடனே பெரியவர்கள்தான் ஜாதகம் எழுதச் சென்றனர்.
அதில் அவளுடைய ஜாதக தோசம் பற்றித் தெரிய வந்திருக்கும். வீட்டில் சொல்லி மற்றவர்களையும்