இருக்கிறது. ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.
இதெல்லாம் சில்சீயினால் தான் சாத்தியமாயிற்று. அத்துடன் உங்கள் வாசிப்பும், கருத்து பகிர்தலும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது.
இன்னும் நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. என்னைச் சுற்றி நடப்பதை, எனக்குத் தெரிந்ததை, நான் அறிந்ததை மட்டும் வைத்து கற்பனை கலந்து எழுதுகிறேன். எழுதுவதற்காக நான் மேலும் நிறைய கற்க வேண்டும் என்று சில ஆசிரியர்களின் எழுத்தைப் பார்க்கும்போது உணர்கிறேன். முயற்சி செய்வேன்.
கதையைப் பற்றி.........
ஐந்தாறு தலைமுறைகளாக பெண் வாரிசே இல்லாத குடும்பத்தில் பிறந்த தேவதை, மகாலட்சுமி நம் நாயகி. ஊரில் பெருந்தனக்கார குடும்பம். குடும்பமே அவளைக் கொண்டாடுகிறது. அன்பானவள்.
பெற்றோரை இழந்து சுயம்புவாய் வளர்ந்தவன் நம் நாயகன். ஏழை. தன் முயற்சியால் படித்து வேலைக்குச் செல்கிறான். பாறை போன்று கடினமானவன்.
இவர்கள் இருவரும் விதிவசத்தால் இணைகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படியிருக்கிறது? தெரிந்து கொள்ள வாசியுங்கள் "எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்"
நன்றி.
என்றும் அன்புடன்
ராசு.
வளரும்............