இருக்கான்னு போட்டுண்டு பாரு...”, காமாட்சி பாட்டி கூற உள்ளறைக்கு சென்று ஆடை மாற்றி வந்தாள்...
“பாட்டி கரெக்டா தச்சிருக்கே பாட்டி... ரொம்ப தேங்க்ஸ்.... எப்படி பாட்டி கரெக்ட் அளவுல தச்ச... எங்கயும் கொஞ்சம் கூட பிடிக்கலை... அதே சமயம் லூசாவும் இல்லை...”
“அதெல்லாம் நீ தூங்கும்போது அளவு எடுத்துண்டேன்... உன்னை ஆச்சர்யப்படுத்தனும்ன்னுதான் உன்னண்ட சொல்லாம கொடுத்தேன்....”
“செம்ம சர்ப்ரைஸ் பாட்டி.... சூப்பரா இருக்கு.... நாளைக்கே போட்டுண்டு போய்டறேன்...”
“உன்னோட அம்மா, அப்பாக்கும் நான் தெச்சது தெரியாது... காலம்பற சுவாமிக்கிட்ட வச்சுட்டு அப்பாக்கிட்ட மஞ்ச தேய்ச்சு வாங்கிக்கோ... அப்பறம் போட்டுக்கலாம்...”
“சரி பாட்டி... அம்மாக்கு தெரியாதா... அப்பறம் எப்படி பாட்டி துணி கிடைச்சுது... நீதான் கடைக்கெல்லாம் போ மாட்டியே....”
“அது பத்ரிக்கிட்ட சொல்லி வாங்கிண்டு வர சொன்னேன்... அவன்தான் யாருக்கும் தெரியாம கடைக்கு போயிட்டு வந்தான்....”
“பத்ரிண்ணாக்கும் அப்போ தேங்க்ஸ் சொல்லணும்... அப்பறம் பாட்டி என்னோட வெள்ளை ஷூ லேஸ் கட்டற இடம் கிழிஞ்சிருக்கு... இன்னைக்கு விளையாடும் போது லேஸ் அவுந்து அவுந்து ஒரே தொந்தரவா போச்சு ... அதை தைக்க முடியுமா...”
“காலம்பற காட்டு... என்ன பண்ணலாம்ன்னு பார்க்கலாம்...”
மறுநாள் காலையில் ஏகப்பட்ட சந்தோஷத்துடன் எழுந்த மைத்தி தன் புது துணியை அனைவருக்கும் காட்டி பெரிய அலப்பறை செய்து பள்ளிக்கு கிளம்பி சென்றாள்....
இப்படியாக மைத்தியின் பயிற்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.... காலை மாலை இரு வேளையும் பயிற்சி என்பதால் பயிற்சி, பள்ளிப்படிப்பு என்று மைத்தி சற்று சோர்ந்துதான் போனாள்... ஆனால் விளையாட்டின் மீது அவளுக்கிருக்கும் ஆர்வம் அந்த சோர்வை போக்கியது....
அவர்கள் பயிற்சி மைய்யத்தின் வழியாக சில சின்ன சின்ன போட்டிகளிலும் மைத்தியும், துளசியும் விளையாட ஆரம்பித்தார்கள்.... ஆறு மாத கடும் பயிற்சிக்கு பின் இருவரும் மாவட்ட போட்டி ஒன்றிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்....
போட்டிகள் அனைத்தும் சென்னையிலேயே நடத்தப்பட்டது... வார இறுதியில் போட்டிகள் என்பதால் பள்ளி செல்வது பெரிதாக பாதிக்கப்படவில்லை....
பெண்கள் மிகுந்த அளவில் கிரிக்கெட் விளையாட வருவதில்லை என்பதால், வயது வரம்பு என்பது பெண்கள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் பார்க்காத காலகட்டம்... அதனால் மைத்தியும்,