(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"புரியுது டாக்டர். நான் ரேச்சலுடன் வருகிறேன். தேங்க் யூ" என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினான்.

மை காட்… ரேச்சல் கர்ப்பமாக இருந்திருக்கிறாள்… ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது… அவளுடைய கணவன் யார்… குழந்தை எங்கே?.... அவள் எப்போது திருமணம் செய்து கொண்டாள். இதுபற்றி அங்கிள் எதுவுமே சொல்லவில்லையே… ஆன்ட்டிக்கு இது தெரியுமா?... பல கேள்விகள் தலைக்குள் ஓட ஷீலாவின் முன் போய் அமர்ந்தான்.

"ஜெமி ஹாஸ்பிடலுக்கு போனியா?. டாக்டர் கிட்ட விசாரிச்சியா?. அவங்க என்ன சொன்னாங்க? ரேச்சலோடு சுயநினைவு எப்ப வருமாம்... அது பற்றி ஏதாவது சொன்னார்களா?" என்று ஷீலா கேட்டார்.

"யெஸ்.. ஆன்ட்டி… நான் போய் பார்த்து அவங்க கிட்ட பேசிட்டேன். அவங்க ரேச்சலை கூட்டிட்டு வந்தால்தான் அவளுடைய உடல் நிலையை செக் பண்ணிட்டு அடுத்து கட்ட சிகிச்சைத் தரனும் என்று சொல்லிட்டாங்க. ஆமாம் எப்படி அந்த பஸ் விபத்துக்கு முன்னாடி அவளோட ஹெல்த் எப்படி இருந்தது சொல்லுங்கள்" என்று கேட்டான்.

"அதுபற்றி எனக்கு தெரியாது. ஏனெனில் ரேச்சல் ஒரு வருடமாக சென்னையிலேயே வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை மேத்யூஸ்தான் சென்று பார்த்து வருவார். எனக்கும் அவளுக்கும் அவ்வளவாக பேச்சுவார்த்தை இல்லாததால் நான் செல்லவில்லை. நான் போனாலும் அவள் என்னை பார்க்க விரும்புவதில்லை. அதனால் நான் அவளை பார்த்து ஒரு வருடம் இருக்கும். அந்த விபத்தின் போதுதான் அவளை நான் பார்த்தேன். ஆனால் இடையில் அவளுக்கு உடல்நிலை கோளாறு வந்ததாக மேத்யூஸ் என்னிடம் சொல்லவில்லை. அன்றைக்கு அவளை சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். இடையில் கோவில்பட்டி தாண்டி அந்த விபத்து நடந்தது. இது மட்டும் தான் எனக்கு தெரியும்" என்றார்.

'அத்தை சொல்வதைப் பார்த்தால் அவருக்கு எந்த விவரமும் தெரியாது போல. ரேச்சல் யாரையோ காதலித்து... கல்யாணம் பண்ணி... குழந்தையை சுமந்து இருந்தது... எதுவுமே அவருக்குத் தெரியாது. ஒருவேளை அங்கிளுக்கு தெரிந்திருக்குமா?. அவருக்கு தெரிந்து இருந்தால் கண்டிப்பாக தன்னிடம் சொல்லியிருப்பாரே' என்று யோசித்தான்.

ஆரம்பமும் அல்லாமல் முடிவும் அல்லாமல் திடுக்கென ஒரு விஷயம் முழித்துக் கொண்டு நிற்கிறது. ரேச்சல் திருமணம் ஆனவள்… நியூ மாம்… அதை தொடர்ந்து யார்… எங்கே… எப்போது… என்று நிறைய கேள்விகள் முளைத்து விட்டன.

அப்படி ஒரு கணவன் கேரக்டர் இருந்திருந்தால் அவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறான்… மனைவியின் நிலையைப் பற்றி அவனுக்குத் தெரியாதா…? அவளை ஏன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.