(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"இல்லை… ஆனால்…"

"என்ன ஆனால்… இப்படி கொடு.. இப்போதாவது படித்து பாரக்கிறேன்." என்று கையை நீட்டினார். ஒருவித பதட்டத்துடன் ரிப்போர்ட்டை பின்னுக்கிழுத்த ஜெமி..

"ஈஸி ஆன்ட்டி… இதை நான் பார்த்துக்கறேன். அந்த டாக்டரிடமே கேட்டுக்கறேன். நீங்கள் வொரி பண்ணாதீங்க"

"ஏன் நான் பார்க்க கூடாதா… என்னாச்சு… ஏதாவது தப்பா இருக்கா…" ஷீலா பதறினார்.

"இல்லை… நீங்கள் ஏற்கனவே கவலையில் இருக்கீங்க… ரேச்சலுடைய மெமரி லாஸ் பத்தி கவலை கொள்ள வேண்டாம்னுதான் சொல்றேன்"

"ரேச்சலுக்கு ஹெல்த் சிக்கலில்லையே… அவளுக்கு ஏதாவது…" அவருக்கு ஒரு.பயம் வந்து விட்டது. ரேச்சலுக்கு உடல்நிலையில் பெரிய பிரச்சினை இருந்து அதை ஜெமி மறைக்கிறானோ…? அவளுடைய உயிருக்கு ஆபத்தாக இருக்குமோ...என்றெல்லாம் நினைத்தார்.

"அப்படி ஒன்றும் இல்லை.நான் தெளிவாக கேட்டு வர்றேன். அவளுடைய பழைய நினைவுகளை திரும்ப வரவைக்க முடியுமான்னு தெரிஞ்சுக்கறேன். அதுக்கு பிறகு நாம மத்ததை டிஸைட். பண்ணுவோம்."

"எனக்கு பயமா இருக்கு ஜெமி"

"ஆன்ட்டி… கவலைபடாதீங்க… அவளுக்கு பழைய நினைவுகள் வந்தால்தான் நல்லது. நான் நாளைக்கு டாக்டரிடம் பேசிவிட்டு உங்களிடம் டிஸ்கஸ் பண்றேன்."

ஷீலாவிடம் சொல்ல முடியாத ஒரு விஷயம் அந்த ரிப்போர்டில் இருந்தது. அந்த ரிப்போர்ட் ரேச்சலை பற்றியதா என்று உறுதி செய்த பிறகுதான் ஷீலாவிடம் சொல்ல வேண்டும்.

ஷீலாவை குழப்பத்தில் நிறுத்தி அன்றைய இரவு கடந்தது….

மறுநாள் ஜெமி ரேச்சலின் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். அது திருநெல்வேலியிலிருக்கும் பெரிய மருத்துவமனை.

அந்த ரிப்போர்ட்டின்படி விவரம் தெரிந்து கொள்ள வந்திருப்பதாக சொல்லவும் குறிப்பிட்ட மருத்துவரை சந்திக்க அனுமதி தந்தார்கள். டாக்டர் வத்ஸலா...

"ரேச்சல் மேத்யூஸ்… " யோசித்தார்.

"பஸ் ஆக்ஸிடென்ட்.கேஸ்.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா டாக்டர்"

"வொய் நாட்… கோவில்பட்டி அருகில் நடந்த பஸ் விபத்தில் அடிபட்டு வந்து இங்கு சேர்ந்தவர்கள் தானே… அப்பாவும் பொண்ணும்… ரொம்ப சீரியஸான கேஸ்… அந்த கேஸ் எனக்கு நினைவிருக்கிறது. மேத்யூஸ் நாலு நாள்ல இறந்து போயிட்டாரு. ரேச்சலை ரிஸ்க் எடுத்து காப்பாற்றினோம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.